Nandhinipriya Ganeshan June 29, 2023
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருநாள் மின்தடை (மாதாந்திர பவர் கட்) அறிவிக்கப்படும். அதன்படி, அனைத்து இடங்களிலும் வெவ்வேறு மணி நேரத்தில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரையிலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின்சார வாரியத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தேதியில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இருப்பினும், சில சமயங்களில் மோசமான வானிலை, அதிக மழை, வெள்ளம் உள்ளிட்ட வேறு சில காரணங்களுக்காகவும் மின்தடை ஏற்படலாம். ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் இவை சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும். இது குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள மின்சாரத் துறையை அணுகலாம். ஆனால், இவ்வாறு தடை செய்யப்படும் மின்தடை, மாதாந்திர மின்தடையுடன் சம்பந்தப்படுத்தபடாது. இந்தப் பதிவின் மூலமாக ஜூலை 2023 மாதத்தில் தேனி மாநகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் எந்தெந்த இடங்களில், எந்தெந்த நாட்களில் மின்தடை செய்யப்படுகிறது என்பதை காணலாம். இதன் மூலம் மின்சாரத்தை பயன்படுத்தி ஏதேனும் முக்கிய பணிகள் இருந்தாலும் செய்துக்கொள்ள முடியும். தேனி மின்தடை பகுதிகள் ஜூலை 2023: பராமரிப்பு பணிக்காக கீழ்கண்ட பகுதிகளில் காலை 09:00 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிவடைந்தால் மதியம் 04:00 மணிக்கு முன் விநியோகம் தொடங்கப்படும். சில சமயங்களில் நீட்டிப்பு பணிகள் இருந்தால், மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படலாம். விரைவில் அப்டேட் செய்யப்படும்…. குறிப்பு: இதில் கொடுக்கப்பட்ட விவரங்கள், பல்வேறு இணையதளங்களில் இருந்து பெறப்பட்டதாகும். மின்தடை குறித்த மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ள அந்தந்த பகுதியின் மின்வாரியங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் தொழில்செய்வதற்கு வங்கியில் கடன் பெற்றுத்தருவதாகக் கூறி, 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி தேனியில் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வேலப்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது சகோதரர் விஜயகுமார் மற்றும் அவரது மகன் ராகுல்பாலாஜி மற்றும் பிரவீனா ஆகிய நால்வரும், கோவை,திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்டோரிடம் தொழில் செய்வதற்கு வங்கி கடன் வாங்கி தருவதாகக் கூறி, சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், போடி அருகே தேவாரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி மணிமாலா. இருவருக்கும் திருமணம் ஆகி 15 ஆண்டுகளாகிறது. இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறு காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ரமேஷ் மணிமாலா தம்பதியினருக்கு ஒரு மகன் மட்டும் உள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணிமாலா கணவரிடம் விவாகாரத்தும், ஜுவனாம்சமும் கேட்டு ஏற்கனவே போடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விசா ரனையும் நடந்து வருகிறது.
குமுளி மலைச்சாலையில் நடந்த விபத்தில் தீவிர சிகிச்சையில் இருந்த கார் ஓட்டுநர் உயிரிழந்ததை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சபரிமலை சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்கள் கோர விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் தேனி பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தேனி மாவட்டத்தில் பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக, போலீசார் பிரேதத்தை தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் ராமச்சந்திரன்-ரம்யா எனும் தம்பதிக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், ரம்யா மீண்டும் கர்ப்பம் தரித்து, கடந்த நவம்பர் 29 ஆம் தேதி மற்றொரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணையின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் வைகை ஆற்றின் கரையோரம் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி - போடிநாயக்கனூர் இடையே அகல ரயில் பாதை அதிநவீன பெட்டியுடன் சோதனையோட்டம் செய்யப்பட உள்ளதால் டிசம்பர் 6ம் தேதி யாரும் அப்பகுதி தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நான்கு கட்டிடங்களாக செயல்பட்டு வருகிறது. இதில் 5 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் எல்கேஜி யுகேஜி மாணவ மாணவிகள் பயின்றுவந்த பள்ளிக்கட்டிடத்தை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக பழமையான கட்டிடம் சேதமடைந்துள்ளது என்று கூறி இடிக்கப்பட்டது. இதற்கு மாற்றுக் கட்டிடம் அதே இடத்தில் கட்டப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வரை கட்டிடம் இடிக்கப்பட்டதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படாமல் உள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்து வருகிறது.