Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,156.06
-592.36sensex(-0.81%)
நிஃப்டி21,856.15
-199.55sensex(-0.90%)
USD
81.57

சென்னை

டான் பாஸ்கோ பள்ளியில் உரிய கட்டணமே வசூலிப்பு..! - நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

Selvarani July 20, 2023

தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என விதிகள் வகுக்கப்பட்டு உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் செம்பியம் ஜி.தேவராஜன் என்பவர் 2017ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதால், பள்ளி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை மாநகர் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்த முடிவு

Baskaran July 14, 2023

மாநகர் முழுவதும் குற்றச் சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி மேற்கொண்டு வரும் நிலையில், ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருகிறது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்ற பிறகு குற்றச்செயல்களை தடுக்க பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அந்த வகையில் மாநகர் முழுவதும் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த அவர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி இன்றுமுதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் போலீஸ் சோதனை தீவிரமாக நடைபெற உள்ளது.

9 ஆண்டுகளின் அரசு செய்த சாதனை - மாணவர்கள் மத்தியில் நிதியமைச்சர் பேச்சு!

Abhinesh A.R July 01, 2023

கடந்த 9 ஆண்டுகளில் கல்வி துறையில் மிகப்பெரிய சாதனையை இந்திய அரசு படைத்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாணவர்களிடையே பேசியுள்ளார்.

அரசு இடத்தை விற்ற தனியார் கல்லூரி - நீதிமன்றம் சொன்ன அதிரடி தீர்ப்பு

Abhinesh A.R July 01, 2023

அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முறைகேடாக சேர்க்கப்பட்ட ஐந்து மாணவர்களிடம் வசூலித்த 2 கோடியே 76 லட்சம் ரூபாயை, மருத்துவ கல்வி இயக்குநகரத்தில் மாணவர் தேர்வுக்குழு செயலாளர் பெயரில் கணக்கு தொடங்கி டெபாசிட் செய்ய தனியார் மருத்துவ கல்லூரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணல் குவாரிக்கு இடைக்காலத் தடை - நீதிமன்றம் அதிரடி

Abhinesh A.R July 01, 2023

விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலத்தில் தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி செயல்பட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிண்டிக்கு ஒரு கேள்வி..? - ஆளுநருக்கு எதிராக சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

Saraswathi June 30, 2023

செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்ட ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்து, சென்னையில் 'கிண்டிக்கு ஒரு கேள்வி..?' என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆளுநரின் நடவடிக்கைக்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.

எங்க குடும்பம் தான் பாஜகவை ஒழிக்கும் - ராசா பளீர் | A Raja Speech

Abhinesh A.R June 29, 2023

நேரு, கருணாநிதி குடும்பம் தான் பிரதமர் மோடியை அப்புறப்படுத்துவார்கள் என்று திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

பாஜக, ஆர்.எஸ்.எஸ் இரண்டும் நாட்டுக்கு கேடு - அழகிரி காட்டம் | Congress Protest

Abhinesh A.R June 28, 2023

தேசம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் ஆர்.எஸ்.எஸ்.சையும் பாஜகவையும் அப்புறப்படுத்துவதை தவிர வேறு வழி இல்லை என கடுமையான பரப்புரை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.. | Chennai Power Shutdown Today

Priyanka Hochumin June 25, 2023

மின்தடை அறிவிப்பு மாதத்திற்கு ஒரு முறை, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்படும். இது எல்லா இடங்களிலும் வெவ்வேறு மணி நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும், காலை 9 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணி வரைக்குள் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு ஏற்படும். மின்சார வாரியத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு, மாதந்தோறும் மின்தடை, ஒவ்வொரு மாதமும், ஒரு குறிப்பிட்ட தேதியில் துண்டிக்கப்படுகிறது. இந்த குறிப்பிடப்பட்ட தினத்தில், மின்சாரம் சம்பந்தப்பட்ட வேலைகள் அனைத்தும் திருத்தம் செய்யப்படும். மேலும், இந்த நேரங்களில் பராமரிப்பு பணிகள் செய்யப்படுகின்றன. அதே நேரத்தில், மோசமான வானிலை, அதிக மழை, வெள்ளம், உள்ளிட்ட வேறு சில காரணங்களுக்காகவும் மின்தடை ஏற்படலாம். அதன் படி, குறிப்பிட்ட நேரங்களில் இவை சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் சீராகி வழங்கப்படும். மேலும், அதிகபட்சமாக 2 அல்லது 3 மணி நேரத்திலும் மின் தடை ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள மின்சாரத் துறையை அணுகலாம். இந்தப் பதிவில், ஒவ்வொரு மாதத்திற்கும், சென்னை மாநகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில், எந்தெந்த இடங்களில், எந்தெந்த நாள்களில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது என்பதை இந்தப் பதிவில் காணலாம். சென்னை மின்தடை பகுதிகள் ஜூலை 2023 பராமரிப்புகள் பணிகள் காரணமாக, கீழே கொடுக்கப்பட்ட பகுதிகள் மற்றும் குறிப்பிடப்பட்ட நாள்களில் காலை 09.00 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிவடைந்தால் மதியம் 4 மணிக்கு முன் மின் விநியோகம் தொடங்கப்படும். சில நேரங்களில், நீட்டிப்பு பணிகள் மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படலாம். விரைவில் அப்டேட் செய்யப்படும்…. குறிப்பு: இதில் கொடுக்கப்பட்ட விவரங்கள், பல்வேறு இணையதளங்களில் இருந்து பெறப்பட்டதாகும். மின்தடை குறித்த மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ள அந்தந்த பகுதியின் மின்வாரியங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

தமிழகத்தை மணிப்பூர் போன்று மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர்..! - நடிகர் சத்யராஜ் தகவல்

Chandrasekaran June 25, 2023

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திரைக்கலைஞர், உரைக்கலைஞர், திராவிடக் கலைஞர் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ், பொன்வண்ணன், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மேடையில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது, தமிழகத்தை மணிப்பூர் போன்று மாற்ற சிலர் நினைப்பதாக சொன்னார்கள். தமிழகம் ஒன்றும் மணிப்பூர் இல்லை, தனிப்போர், திராவிடம் என்ற போர், இங்கே அவர்கள் பருப்பு இங்கே வேகாது. அவர்களுக்கு தொல்லை நானோ,வழக்கறிஞர் அருள்மொழி போன்றவர்களோ இல்லை, அவர்களுக்கு தொல்லையே அமைச்சர்கள் சேகர்பாபு போன்றவர்கள் தான். அமைச்சர் சேகர்பாபு அவசரப்பட்டு எம்.எல்.ஏ.வுக்கு நின்று விட்டார். எம்.எல்.ஏ.வாக ஆகாமல் எம்.பி-யாக ஆகியிருந்தால் மத்தியில் சென்று மத்திய அறநிலையத்துறை அமைச்சராகி சிலருக்கு பெரிய தொந்தரவாக இருந்திருப்பார். கலைஞர் கருணாநிதி வசனத்தில் நான் நடிக்கும் வாய்ப்பை வாங்கி கொடுத்தவர் தந்தை பெரியார். நான் பெரியார் கொள்கைக்காரன், எம்.ஜி.ஆர் ரசிகன் என்று அப்போது சிலருக்கு தெரியாது. பாலைவனம் ரோஜாக்கள் படத்தில் நான் நடிப்பதை தடுத்து நிறுத்த சிலர் முயற்சித்தார்கள். ஆனால் நான் பெரியாரின் கொள்கைக்காரனாக இருந்ததால் வாய்ப்பு கிடைத்தது. சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்று கொண்டு வந்தவர் கருணாநிதி. இதற்காகவே பெண்கள் கருணாநிதியின் ஆதரவாளராக இருக்க வேண்டும். கல்வி,வேலைவாய்ப்பை கொடுத்து விட்டால் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துவிடும் என்று போராடியவர் கருணாநிதி. பல சட்டங்களுக்கு தமிழகம் முன்னோடியாக இருந்துள்ளது. தற்போதைய அரசாங்கம் துணிச்சலான அரசாங்கம். துணிச்சலை 10 பக்கம் வசனம் எழுதியும் காட்டத் தெரியும். முதல்வர் ஸ்டாலினை போல உதட்டாலயே துணிச்சலை காட்ட முடியும். சட்டசபையில் கவர்னர் எழுந்து சென்ற போது பல்லு தெரியாமல் சிரித்து துணிச்சலை காட்டியவர் முதல்வர் ஸ்டாலின். திராவிடம், திராவிட மாடல் என்பது வெறும் வார்த்தை மட்டும் அல்ல அது சித்தாந்தம். சித்தாந்தத்தை விட்டு வெளியே வர முடியாது. தனி நபர் மீது விமர்சனம் வரலாம் ஆனால் சித்தாந்தம் மீது விமர்சனம் வரவே முடியாது. ஏனென்றால் அனைத்து மக்களும் சமமாக இருக்க வேண்டும் கல்வி வேலைவாய்ப்பில் நிரந்தர இடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற இயக்கம் தான் திராவிட மாடல் அரசாங்க இயக்கம். திராவிடத்திற்கு துணிச்சலான தலைமை வந்து கொண்டு தான் இருக்கிறது. வாரிசு என்பதற்காக மட்டும் அந்த தலைமை கிடைத்து விடாது. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் 15 வயதில் கையில் கொடியுடன் சுற்றியவர். இவ்வாறு, சத்யராஜ் பேசினார்.