Mon ,Jun 05, 2023

சென்செக்ஸ் 62,547.11
118.57sensex(0.19%)
நிஃப்டி18,534.10
46.35sensex(0.25%)
USD
81.57

கோயம்புத்தூர்

10 வயது சிறுமியை சீரழித்த காமுகர்கள்.. கோவையில் கொடூரம்!!

Sekar January 26, 2023

கோவையில் 10 வயது சிறுமியை இரண்டு ஆண்டுகளாக, இரண்டு காமுகர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்தாண்டு கொண்டாட போனது குத்தமா?; ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

KANIMOZHI January 02, 2023

கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்ற ஓய்வு பெற்ற உதவி ஆணையர் மற்றும் காவலர் வீட்டில் 63 சவரன் நகை திருடட்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பைக் மீது லாரி பயங்கர மோதல்..! சக்கரத்தில் சிக்கிய இளைஞர்.. திக்.. திக்.. காட்சிகள்! 

KANIMOZHI December 30, 2022

கோவை காளப்பட்டி அருகே கடந்த 28 ம் தேதி இரு சக்கர வாகனம் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் மயிரிழையில் காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ.... 

விடுதி அறையில் தூக்கிட்டு கல்லூரி மாணவன் தற்கொலை; போலீசார் விசாரணை! 

Kanimozhi December 07, 2022

பொள்ளாச்சி அருகே தனியார் கல்லூரி மாணவன் விடுதி அறையில் தூக்கிட்டுக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த கரடி - கிராம மக்கள் அச்சம்!

Editorial Desk November 24, 2022

ஊட்டி அருகே இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த கரடியால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. தேயிலை தோட்டத்திற்குள் சுற்றி வந்த கரடி ஒன்று, நேற்று இரவு போர்த்தி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டும், டார்ச் லைட்டுகளை அடித்தும் கரடியை விரட்ட முயன்றுள்ளனர். மனிதர்களின் கூச்சலைக் கேட்ட கரடியும் அருகே இருந்த தேயிலை தோட்டத்திற்குள் ஓடி மறைந்துள்ளது. இதுவரை தேயிலை தோட்டங்களில் சுற்றித் திரிந்த கரடி, தற்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் உலவ ஆரம்பித்துள்ளது போர்த்தி கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து உடனடியாக பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை சம்பவம் அந்த முறையில் நிகழ்த்தப்பட்டதா.. வெளியான அதிர்ச்சித் தகவல்!!

Sekar October 29, 2022

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு நடந்த கார் வெடிப்பு சம்பவம் ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தாக்கள் பயன்படுத்தும் ஒற்றை ஓநாய் தாக்குதல் (Lone wolf attack) முறையை ஒத்திருப்பது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முந்தைய தினம் கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை சங்கமேஸ்வர் கோவில் எதிரில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தில் தீவிரவாத தொடர்புகள் கண்டறியப்பட்டதோடு, உயிரிழந்தவர் பழைய துணிக்கடை வியாபாரியான ஜமோசா முபின் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மிகத் தீவிரமாக விசாரணை நடத்திய நிலையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல், தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் கையாளும் ஒற்றை ஓநாய் தாக்குதல் முறையை (Lone wolf attack) ஒத்திருப்பது தெரியவந்துள்ளது.

கார் சிலிண்டர் வெடித்து விபரீதம்.. கோவையில் பரபரப்பு!!

Sekar October 23, 2022

கோவையில்  காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகரில் உள்ள உக்கடம் ஈஸ்வரன் கோவில் அருகே சிலிண்டரில் இயங்கக் கூடிய கார் ஒன்று ஸ்பீட் ப்ரேக்கரில் ஏறி இறங்கியபோது வெடித்துச் சிதறியது. காரில் இருந்த சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதுவே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டு துண்டாக உடைந்துவிட்டது.

ஒரே மகன் விபத்தில் இறந்ததால் துக்கம்.. தற்கொலை செய்துகொண்ட பெற்றோர்!!

Sekar October 21, 2022

கோவையில் ஒரே மகன் விபத்தில் இறந்த துக்கம் தாளாமல் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் கணுவாய் ரோட்டில் வசித்து வந்த சஞ்சீவ் சங்கர் (வயது 46) மற்றும் அவரது மனைவி நந்தினியின் (45) ஒரே மகன் ரவி கிருஷ்ணா (22). கல்லூரி மாணவரான ரவி கிருஷ்ணா தனது நண்பர்களுடன் பேரூர் அருகே உள்ள ரிசார்ட்டுக்கு சென்று ஓணம் பண்டிகை கொண்டாடியுள்ளார். பின்னர் மறுநாள் காலையில் அங்கிருந்து தனது நண்பர்களுடன் ஒரு காரில் வீட்டிற்கு திரும்பியபோது எதிர்பாராத விதமாக்க தென்னமநல்லூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் ரவி கிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேர் இறந்தனர். 

டேய் பொடியா ஹெல்மெட் போட்டு போடா.. சிக்னலில் ட்ராபிக் போலீசின் குறும்புத்தனம்!!

Sekar October 20, 2022

டேய் பொடியா ஹெல்மெட் போட்டு போடா என சாலை விதிகளை மீறி செல்லும் இளைஞர்களுக்கு தன்னுடைய குறும்புத்தனமான பேச்சின் மூலம் கோவை டிராபிக் போலீஸ் ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை லக்ஷ்மி மில் சிக்னலில் ட்ராபிக்கை நிர்வகித்துக் கொண்டிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர், வாகனத்தில் இருக்கும் ஒருவரை நல்லா சிரிக்கிற ராஜா என்றும், இரு சக்கர வாகனத்தில் தலை கவசம் அணியாமல் மூன்று பேர் பயணித்ததை கண்டவுடன், டே பொடியா ஹெல்மெட் போடுடா என்றும் கூறுகிறார். மேலும், மூன்று பேர் வண்டியில் செல்வதை பார்த்த அவர், அப்பா அம்மாக்கு தெரியாம வண்டிய தூக்கிட்டு வந்துடுறீங்க என்றும் சொல்கிறார். சாலைவிதிகளை மீறுவதை நக்கலாக குத்திக் காட்டி மைக்கில் அவர் பேசும் பேச்சு, வாகன ஓட்டிகளை திரும்பிப் பார்க்க வைக்கிறது.

கோவையில் குட்டிக் காவலர் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!!

Sekar October 12, 2022

சாலை விபத்துகளை தடுப்பதற்காக கோவையில் குட்டிக் காவலர் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நகரமான கோவையில்தான் அதிக சாலை விபத்துகள் நடக்கின்றன. இதனால் சாலை விபத்துகளை தவிர்க்கவும், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உயிர் எனும் தொண்டு அமைப்பு, அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அந்த வகையில், உயிர் அமைப்பு தற்போது கோவையில் பள்ளி மாணவர்களைக் கொண்டு குட்டி காவலர் எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை அரசுடன் இணைந்து தொடங்கி உள்ளது.  இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பெரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்.