Sun ,Mar 26, 2023

சென்செக்ஸ் 57,527.10
-398.18sensex(-0.69%)
நிஃப்டி16,945.05
-131.85sensex(-0.77%)
USD
81.57

ஈரோடு

ஈரோட்டில் பரபரப்பு..! மத்திய படை வீரர்கள் குவிப்பு!

Gowthami Subramani February 11, 2023

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல், வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்குதல் திரும்பபெறும் அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, வேட்புமனு தாக்குதல் பெற்று இறுதியாக 77 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. குறிப்பாக இந்த தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிட உள்ளார்.

உலக சாதனைக்காக குமாரபாளையம் மாணவ, மாணவிகள் செய்த காரியம்!

KANIMOZHI January 17, 2023

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உலக சாதனைக்காக 102 மாணவ, மாணவிகள் மூன்றரை மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர். 

பிரபல அரசியல் தலைவர் மரணம்! அதிர்ச்சியில் உறவினர்கள்.

Gowthami Subramani January 04, 2023

ஈரோடு கிழக்குத் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா இளம் வயதிலேயே மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரான இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா. இவர், தமிழக காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராக இருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் பி.ஏ.பொருளாதாரம் படித்துள்ளார். இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

கருப்பன் தொல்ல தாங்க முடியல... கடுப்பான கிராம மக்கள் செய்த காரியம்!

KANIMOZHI December 28, 2022

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

சில்க் ஸ்மிதாவிற்கு இப்படியொரு ரசிகரா?... சிலிர்க்க வைத்த சம்பவம்! 

Kanimozhi December 02, 2022

நடிகை சில்க் சுமிதாவின் 63 வது பிறந்த தினத்தை தூய்மை பணியாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய தீவிர ரசிகர் சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்துள்ளார். 

புலிகள் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

Kanimozhi December 02, 2022

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 2022ம் ஆண்டிற்கான மழைக்குப் பிந்தைய புலிகள் கணக்கெடுப்பு இன்று முதல் டிசம்பர் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது.   இதில் முதல் மூன்று நாட்கள் நேர்கோட்டு பாதை மற்றும் பெரிய தாவர உண்ணிகளான யானை, காட்டெருமை ஆகியவற்றை கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. 

களைகட்டிய கலைத்திருவிழா - 56 பள்ளி மாணவர்களிடையே போட்டா போட்டி!

Kanimozhi December 02, 2022

கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வரும் கலைத் திருவிழா போட்டிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இறுதி நாளான நேற்று நடன போட்டிகள் நடைபெற்றன, பரதம், கோலாட்டம் , கிராமிய நடனம், ஒயிலாட்டம், மேற்கத்திய நடனம், பாரம்பரிய நடனம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

விரைவில் நடைபெற உள்ள மாரத்தான்… எங்கு.. எப்போது..? கலந்து கொள்ளும் அனைவருக்கும் இலவசம்.. என்னென்ன தெரியுமா..?

Gowthami Subramani November 27, 2022

ஈரோடு மாவட்டம் பவானியில், திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஆண்கள், பெண்களுக்கான பரிசுத் தகவல்கள், வயது வரம்பு உள்ளிட்ட அனைத்துத் தகவல்களைப் பற்றி காணலாம். இன்றைய தினம் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினம் ஆகும். இதனையொட்டி திமுகவினர் பெரும்பாலான பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.

அடிக்கடி பாம்பு கனவில் வருது.. பூசாரியை நம்பி செய்த பரிகார பூஜை.. நாக்கையே இழந்த விவசாயி.. 

Nandhinipriya Ganeshan November 26, 2022

இந்த காலத்திலும் கூட மூடநம்பிக்கைகளை பின்பற்றியும், நம்பியும் பல வினோத சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மூடநம்பிக்கைக்கு எதிராக எத்தனையோ வீடியோக்கள் சினிமாவிலும், சமூக வலைத்தளங்களிலும் வந்துக்கொண்டிருந்தாலும் அதை காதில்கூட போட்டுக்கொள்ளாமல் ஒருசிலர் ஏமாந்து விடுகின்றனர். சில சமயங்களில் அது விபரீதத்திலும் முடிந்துவிடுகிறது. அந்தமாதிரி ஒரு சம்பவம் தான் ஈரோட்டில் அரங்கேறியுள்ளது. திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்த 54 வயதான விவசாயி ஒருவரின் கனவில் அடிக்கடி பாம்பு வந்துள்ளது. அய்யோ.. அடிக்கடி இப்படி கனவு வருதே என்று பயந்து போன அவர், தன் மனைவியிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து, இருவரும் அப்பகுதியில் உள்ள ஜோசியர் ஒருவரை அணுகியுள்ளனர். அந்த ஜோசியரும், ஈரோடு மாவட்டத்தில்  உள்ள ஒரு கோவில் சாமியாரிடம் பரிகார பூஜை செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய அந்த விவசாயி, ஜோதிடர் கூறிய கோவிலுக்கு சென்று அங்கிருந்த பூசாரியை சந்தித்து நடந்தவற்றை கூறியிருக்கிறார். அந்த பூசாரியும், அவரை உள்ளே அழைத்து சென்று அங்குள்ள 20-க்கும் மேற்பட்ட பாம்புகளை காட்டியுள்ளார்.

64 பைரவர்களும் ஒரே இடத்தில்.. ஆசியாவிலேயே பெரிய பைரவர் கோவில் நம்ம ஈரோட்டில்.. 

Nandhinipriya Ganeshan November 22, 2022

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள ராட்டை சுற்றிபாளையத்தில் பிரம்மாண்டமான பைரவர் கோவில் கட்டுமான பணிகள் சுமார் 7 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது, திருப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ள இந்த கோவிலில் உலகில் எங்கும் இல்லாதவாறு 64 பைரவர்களும் ஒரே இடத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல், 3 அடி உயர காலபைரவர் சிலையும் பிரம்மாண்டமாக நிறுவப்பட்டு உள்ளது. இந்த சிலை யுனிக்யூ புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் எனும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், கோவிலின் மகா கும்பாபிஷேக விழா வருகின்ற 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10.15 மணிக்கு நடைபெற உள்ளதாக ஸ்வர்ண பைரவ பீடம் அறக்கட்டளை நிர்வாகி விஜயசாமிகள் தெரிவித்துள்ளார்.