Wed ,May 15, 2024

சென்செக்ஸ் 73,016.94
-87.67sensex(-0.12%)
நிஃப்டி22,215.35
-2.50sensex(-0.01%)
USD
81.57

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் பவர் கட்! எந்தெந்த இடங்கள் தெரியுமா..? | Dindigul Power Shutdown Areas

Nandhinipriya Ganeshan June 24, 2023

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருநாள் மின்தடை (மாதாந்திர பவர் கட்) அறிவிக்கப்படும். அதன்படி, அனைத்து இடங்களிலும் வெவ்வேறு மணி நேரத்தில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரையிலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின்சார வாரியத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தேதியில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இருப்பினும், சில சமயங்களில் மோசமான வானிலை, அதிக மழை, வெள்ளம் உள்ளிட்ட வேறு சில காரணங்களுக்காகவும் மின்தடை ஏற்படலாம். ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் இவை சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும். இது குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள மின்சாரத் துறையை அணுகலாம். ஆனால், இவ்வாறு தடை செய்யப்படும் மின்தடை, மாதாந்திர மின்தடையுடன் சம்பந்தப்படுத்தபடாது. இந்தப் பதிவில் ஒவ்வொரு மாதத்திற்கும், திண்டுக்கல் மாநகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் எந்தெந்த இடங்களில், எந்தெந்த நாட்களில் மின்தடை செய்யப்படுகிறது என்பதை காணலாம். இதன் மூலம் மின்சாரத்தை பயன்படுத்தி ஏதேனும் முக்கிய பணிகள் இருந்தாலும் செய்துக்கொள்ள முடியும். ஜூன் 2023 திண்டுக்கல்லில் மின்தடை பகுதிகள்: பராமரிப்பு பணிக்காக கீழ்கண்ட பகுதிகளில் காலை 09:00 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிவடைந்தால் மதியம் 04:00 மணிக்கு முன் விநியோகம் தொடங்கப்படும்.  சில சமயங்களில் நீட்டிப்பு பணிகள் இருந்தால், நேரம் மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படலாம். குறிப்பு: இதில் கொடுக்கப்பட்ட விவரங்கள், பல்வேறு இணையதளங்களில் இருந்து பெறப்பட்டதாகும். எனவே, மின்தடை குறித்த மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ள அந்தந்த பகுதியின் மின்வாரியங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

சிறுதானியத்தில் விதவிதமாய் வெளிநாட்டு உணவு; களைகட்டிய உணவுத்திருவிழா! 

KANIMOZHI January 11, 2023

சர்வதேச சிறுதானிய ஆண்டான 2023 முன்னிட்டு கொடைக்கானல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது. சர்வதேச சிறுதானிய ஆண்டாக 2023 ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதில் பல இடங்களில் சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது.

பழனிக்கு நடைபாதை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... விபத்தை தடுக்க பலே ஏற்பாடு! 

KANIMOZHI December 30, 2022

உசிலம்பட்டி வழியாக பழனி முருகன் கோவில் மற்றும் சபரிமலைக்கு பாதையாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு இரவினில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி போக்குவரத்து காவலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

என் மகனை காப்பாத்துங்க; மர்ம நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை! 

KANIMOZHI December 26, 2022

மர்மநோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் தமிழக அரசும் முதல்வரும் உதவி செய்து சிறுவனை காப்பாற்ற வேண்டும் என பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். 

8 டிகிரிக்கு கீழ் வெப்பநிலை; குளு,குளு கிளைமேட்டில் கொடைக்கானல்!

KANIMOZHI December 24, 2022

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது கடும் குளிர் தொடங்கியுள்ளது.

கொண்டாட்டத்திற்கு தயாராகும் கொடைக்கானல்; என்னென்ன சிறப்பு ஏற்பாடுகள்?

KANIMOZHI December 22, 2022

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்பதற்காக மின்னொழியில் ஜொலிக்கும் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் தயாராகி வருகிறது.

தமிழகத்திலேயே முதன் முறை; அமைச்சர் ஆரம்பித்து வைத்த அசத்தல் திட்டம்! 

KANIMOZHI December 15, 2022

தமிழக பொது நூலகத்துறை மூலமாக நூலக நண்பர்கள் திட்டம் திண்டுக்கல்லில் இன்று நூலக நண்பர்கள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினை தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார்.

ரூ.3,000-யில் இருந்து 5000 ஆக அதிகரிப்பு; இல்லத்தரசிகள் கவலை! 

KANIMOZHI December 03, 2022

நாளை  முகூர்த்த நாள் என்பதால்  பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.  திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு  சராசரியாக நாள் ஒன்றுக்கு 20 முதல் 25 டன் பூக்கள் வரை விற்பனைக்கு வரும் ஆனால் இன்று 03.12.22 திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு 15 டன் அளவில் மட்டுமே பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது. 

மவுசு கூடிய மல்லிகை - ஒரு கிலோ இவ்வளவா? 

Kanimozhi December 02, 2022

பனிப்பொழிவு, முகூர்த்த நாட்கள் காரணமாக திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு 9 டன் பூக்கள் மட்டுமே விற்பனைக்கு வருகை, ஒரு கிலோ மல்லிகை பூ 3,100க்கு விற்பனை செய்யப்பட்டது மல்லிகை பிரியர்களின் மனதை வாட வைத்துள்ளது. 

தலைக்கேறிய காமம்; பச்சிளம் குழந்தை மர்ம மரணத்தில் அதிரடி திருப்பம்! 

Kanimozhi December 02, 2022

நிலக்கோட்டை அருகே பச்சிளம் குழந்தை கிணற்றில் தவறி விழுந்து இறந்த வழக்கில் காவல்துறையின் விசாரணையில் பகீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.