Gowthami Subramani March 24, 2023
சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம், எல்லா வகையான துன்பங்களிலிருந்தும் விடுபடலாம் எனக் கூறுவர். அதிலும், சனி பகவானின் துன்பங்களிலிருந்து விடுபட நினைப்பவர்கள், ஆஞ்சநேயரை வழிபடுவர். ஏனெனில், புராணங்களின் படி, ஆஞ்சநேயர் பெயரைச் சொல்லும் போது சனி பகவானின் தாக்கத்திலிருந்து விடுபடலாம் எனக் கூறுவர்.
Nandhinipriya Ganeshan March 21, 2023
தமிழ், மலையாள மாதங்கள் எப்படி சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறதோ, அதைப்போலவே தெலுங்கு, கன்னட மொழியின் மாதங்கள் நிலவின் இயக்கத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. அதாவது தெலுங்கு வருடப்பிறப்பு அல்லது உகாதி என்று சொல்லுவார்கள். இந்த உகாதி தினத்தில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து கொண்டு, யுகாதி அல்லது உகாதி பச்சடியுடன் அறுசுவை விருந்து சமைத்து பண்டிகை கொண்டாடுவார்கள். வெல்லம், வேப்பம்பூ, மாங்காய், புளி, உப்பு, மிளகாய் எல்லாம் சேர்த்து கலவையாக பச்சடி சமைப்பது உகாதி பச்சடி. தமிழ் புத்தாண்டை போலவே உகாதி புத்தாண்டிலும் பஞ்சாங்கம் படிக்கும் பழக்கம் வைத்திருக்கிறார்கள். இந்த நாளில் வீட்டில் கோலங்களும், மாவிலை தோரணங்களும் களைகட்டும். இதோ உங்க வீட்டு வாசலை மேலும் வண்ணமையமானதாக மாற்ற அழகிய உகாதி ரங்கோலி கோலங்கள்.
Nandhinipriya Ganeshan March 21, 2023
தமிழ், மலையாள மாதங்கள் எப்படி சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறதோ, அதைப்போலவே தெலுங்கு, கன்னட மொழியின் மாதங்கள் நிலவின் இயக்கத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. அதாவது தெலுங்கு வருடப்பிறப்பு அல்லது உகாதி என்று சொல்லுவார்கள். இந்த உகாதி தினத்தில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து கொண்டு, யுகாதி அல்லது உகாதி பச்சடியுடன் அறுசுவை விருந்து சமைத்து பண்டிகை கொண்டாடுவார்கள். வெல்லம், வேப்பம்பூ, மாங்காய், புளி, உப்பு, மிளகாய் எல்லாம் சேர்த்து கலவையாக பச்சடி சமைப்பது உகாதி பச்சடி. தமிழ் புத்தாண்டை போலவே உகாதி புத்தாண்டிலும் பஞ்சாங்கம் படிக்கும் பழக்கம் வைத்திருக்கிறார்கள். இந்த நாளில் வீட்டில் கோலங்களும், மாவிலை தோரணங்களும் களைகட்டும்.
Gowthami Subramani March 20, 2023
அல்லாவின் விருப்பத்திற்கேற்ப நோன்பு இருந்து, அதிக ஈடுபாட்டுடன் அல்லாவின் கருணையைப் பெற மேற்கொள்ளும் செயல் சிறப்பைத் தரும். இஸ்லாமியர் ஒவ்வொருவரும் நோன்பைக் கடைபிடித்து வருவதன் மூலம் உடல் மற்றும் மன வலிமை அடைவர் என்று கூறலாம். இந்த நோன்பானது ஒவ்வொரு முஸ்லீமும் இருக்க வேண்டிய கடமை ஆகும். நோன்பு இருப்பது என்பதும் சாதாரண விஷயம் அல்ல. இந்த நோன்பு இருக்கும் நேரத்தில் நாம் அறியாத சில விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, ரமலான் நோன்பு குறித்து நன்கு அறிந்து இருப்பது அவசியம். இந்த நோன்பை மேற்கொவதற்கு முன்னதாக அதன் விதிமுறைகளைத் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.
Nandhinipriya Ganeshan March 20, 2023
தமிழ்க்கடவுள் முருகனை மனதில் நினைத்து வழிபடும் தினமே பங்குனி உத்திரம். இது வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம் போன்ற திருவிழாக்களைப் போல் பங்குனி உத்திரம் என்று சொன்னாலே முருகப் பெருமான் தான் நினைக்கு வருவார். பொதுவாக ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும் விரதம் இருப்பதும் வழக்கம். ஆனால், பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவம் உண்டு. அதுமட்டுமல்லாமல், மற்ற மாதங்களை ஒப்பிடுகையில் பங்குனி மாதத்தில் தான் அதிக தெய்வத் திருமணங்கள் நடைபெறுமாம். இது புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அப்போ எவ்வளவு சிறப்பு வாய்ந்த மாதமாக இருக்கும் என்று நீங்களே யோசித்து பாருங்கள்.
Priyanka Hochumin March 20, 2023
உலகத்தில் பல மதங்கள், கலாச்சாரங்கள், மொழிகள் பயன்படுத்தப்படுகிறது. அதில் இஸ்லாமிய மதத்தின் புனிதமான மாதமாக திகழ்வது ரமலான் எனப்படும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் மாதமாகும். அந்த ஒரு மாத காலத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, விரதமிருந்து, அல்லாவை தொழுது, குரான் படித்து, அல்லா மீது தங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துவார்கள். அந்த காலத்தில் நோம்பு இருப்பதை கெடுக்கும் வகையில் எந்த ஒரு காரியத்தையும் செய்ய மாட்டார்கள்.
Gowthami Subramani March 18, 2023
அனுமனின் மந்திரமான ஸ்ரீ ராமஜெயம் மந்திரம் எழுதி அனுமனிடம் சமர்ப்பித்தால், அது கோடான கோடி பலன்களைத் தரும் என்பது வழக்கம். தீராத கஷ்டங்கள் அனைத்தும் தீர்த்து வைப்பார் அனுமன். ஆன்மீகக் கூற்றின் படி ராம நாமாவை சிந்தித்தால், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்த பலன் உண்டாகும் என ஈஸ்வரன் கூறுகிறார்.
Nandhinipriya Ganeshan March 17, 2023
சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திதி அல்லது சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த 3ம் நாள் வரும் திதி 'அட்சய திருதியை' என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளர்வது, செழிப்பு என்று அர்த்தம். அந்தவகையில், அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அந்த பொருள் பெருகும் என்பது ஐதீகம். அதனால்தான் அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை எவ்வளவு விலையாக இருந்தாலும் கிராம் கணக்கிலாவது வாங்குவார்கள். தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டும் என்பது கிடையாது வீடு, மனை, உப்பு, அரிசி, ஆடை போன்று வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கலாம். அன்றைய தினத்தில் எந்த செயலைத் துவங்கினாலும் அது முழுமையாக வெற்றி பெறும். ஒருவேளை தங்கம் வாங்காத, தங்கம் வாங்க முடியாதவர்கள் ஏழைகளுக்கு தானம் செய்யலாம். இவ்வாறு தானம் செய்வதால் நம் சந்ததியினர் நிறைவான வாழ்க்கையை வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. 2023ல் அட்சய திருதியை எப்போது? இத்தனை சிறப்பு வாய்ந்த அட்சய திருதியை இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி (சித்திரை மாதம் 10 ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதாவது, ஏப்ரல் 22 ஆம் தேதி காலை 07.49 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 07.47 மணிக்கு முடிவடைகிறது. When is Akshaya Tritiya in 2023: Saturday, 23 April 2023 Tritiya Date Start | 22 April 2023 at 07:49 AM Tritiya Date Ends | 23 April 2023 at 07:47 AM
Nandhinipriya Ganeshan March 15, 2023
பொதுவாக பூஜையறையில் என்னென்ன பொருட்கள் மற்றும் படங்களை வைக்க வேண்டும்? வைக்க கூடாது? என்பதற்கு நிறைய ஆகம விதிமுறைகள் இருக்கின்றன. அதுபோல் இறந்தவர்களின் படத்தை பூஜையறையில் வைக்கக் கூடாது என்றும் சாஸ்திரம் சொல்கிறது. ஆனால், மனித உருவில் வாழ்ந்து தற்போது நாம் தெய்வமாக வணங்கும் சாய்பாபாவின் படங்களை பூஜை அறையில் வைக்கலாமா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கும். சந்தேகமே வேண்டாம், ஏனென்றால் சாய்பாபா இறந்தாலும் கூட இறவா நிலையை அடைந்தவர். அதாவது ஜீவசமாதி அடைந்தவர். எனவே, அவரின் படத்தை இறந்தவர்களின் படத்திற்கு ஒப்பிடக்கூடாது. சாய்பாபா இறந்தவர் அல்ல புண்ணிய ஆத்மாவாக மாறிய மனித கடவுள் ஆவார். எனவே, தாராளமாக அவரின் படத்தை வீட்டின் பூஜையறையில் வைத்துக் கொள்ளலாம்.
Nandhinipriya Ganeshan March 14, 2023
ஜோதிடத்தின்படி, நவகிரகங்களின் செயல்பாடுகளை பொருத்து தான் ஒருவரின் ஜாதகம் அமைகிறது. அதேபோல், ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அந்தவகையில், நவகிரகங்களில் ஒருவரான குருபகவான் அள்ளிக் கொடுப்பதில் வள்ளலாகத் திகழ்கிறார். பொதுவாக ஒவ்வொரு கடவுளுக்கு ஒரு உகந்த நாள் இருக்கும். அதுபோல குருபகவானுக்கு உகந்த நாள் வியாழக்கிழமை. 16 வளர்பிறை வியாழக்கிழமை உரிய முறையில் விரதம் இருந்து குருபகவானை வழிபாடு செய்தால், குருபகவானின் முழு அருளையும் பெறமுடியும் என்பது ஐதீகம். சுமார் 3 ஆண்டுகள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் குருபகவானின் பூரண அருள் நிச்சயம் கிடைக்கும்.