Sun ,Mar 26, 2023

சென்செக்ஸ் 57,527.10
-398.18sensex(-0.69%)
நிஃப்டி16,945.05
-131.85sensex(-0.77%)
USD
81.57

வானிலை

மொட்ட வெயில் அடிக்குதுனு கவலைப்படாதீங்க.! ஜோர்னு மழை வரப்போகுது..

Gowthami Subramani March 24, 2023

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வந்தது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வந்தது. இதில், அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,

23 மாவட்டங்களுக்கு பலத்த எச்சரிக்கை.! இதுல உங்க மாவட்டமும் இருக்கானு பாருங்க.. | Rain Status in Tamilnadu

Gowthami Subramani March 23, 2023

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக, ஓரிரு இடங்களில், குறிப்பாக திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

வெளித்து வாங்கப் போகும் கனமழை.! உஷாரா இருந்துக்கோங்க..

Gowthami Subramani March 22, 2023

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் கனமழை வருவதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 22.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் டி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23.03.2023 முதல் 25.03.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 4 நாட்களுக்கு மழை எச்சரிக்கை வெளிய போக வேண்டாம் | Rain News Today in Tamil

Priyanka Hochumin March 21, 2023

தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்போது உலகளவில் பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதன் விளைவாக இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்துள்ளது. எதனால் பருவநிலையில் திடீர் மாற்றம் மற்றும் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்துள்ளது குறித்து விவரங்களை பார்க்கலாம். வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்..

Nandhinipriya Ganeshan March 18, 2023

சென்னையில் நேற்று திடீரென கொட்டித் தீர்த்த கனமழையால் அண்ணாநகர், திருமங்கலம், முகப்பேர், கொளத்தூர், பாடி, வளசரவாக்கம், விருகம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், அடுத்த 5 நாட்களுக்கு (22 ஆம் தேதி வரை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 5 நாள்களுக்கு கொட்டோ கொட்டுனு கொட்டப் போகுது.! உஷாரா இருந்துக்கோங்க..

Gowthami Subramani March 17, 2023

தமிழகத்தில் சென்னை மற்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் - மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை..

Nandhinipriya Ganeshan March 16, 2023

சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியா நாட்டில் ஏற்பட்ட தொடர்ச்சியான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50000 க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபாக பலியாகினர். உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மிகப்பெரிய துயர சம்பவம். ஆனால், அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் தொடர்ந்து சில நாட்களாகவே நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்தவகையில், இன்று நியூசிலாந்து நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் நியூசிலாந்தில் வெலிங்டன் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து இன்று நியூசிலாந்தின் வடக்கே உள்ள கெர்மடெக் தீவுகளில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இருப்பினும், 300 கி.மீ சுற்றளவில், மக்கள் வசிக்காத தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதுபோலவே நம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் அதிகாலை 4.2 என்ற ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடிச்சித் தூக்கப் போகும் மழை.! இன்னும் 5 நாளைக்கு விடவே விடாது! | Rain Status in Tamilnadu

Gowthami Subramani March 07, 2023

தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. அதன் படி, அடுத்த 5 தினங்களுக்கான வானிலை ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

உஷார் மக்களே! அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடர்மழைக்கு எச்சரிக்கை.. குறிப்பா இந்த இடங்களில்..

Nandhinipriya Ganeshan March 03, 2023

தென் தமிழகத்தில் இன்று மற்றும் நாளை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 03.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். 04.03.2023: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். 05.03.2023: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 06.03.2023 மற்றும் 07.03.2022: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

துருக்கியை தொடர்ந்து இந்த இடத்திலும் சக்திவாய்ந்த பூகம்பம்.. பீதியில் மக்கள்..

Nandhinipriya Ganeshan February 15, 2023

கடந்த வாரத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியா நாடே நிலைகுலைந்து போயிருக்கின்றன. ஆயிரக்கணக்கான உயிர் பலி. மீண்டும் மீண்டும் பூகம்பம். நெஞ்சை உலுக்கிய மக்களின் நிலை. கடும் பனியிலும் தீவிரமான மீட்புப்பணி என பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்தநிலையில், மீண்டும் நியூசிலாந்து பகுதியில் சக்திவாய்ந்டஹ் நிலநடுக்கம் ஏற்பட்டு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நியூசிலாந்து வெலிங்டன் பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது, நியூசிலாந்து நாட்டின் லோயர் ஹட் பகுதியில் இருந்து 78 கிலோ மீட்டர் தூரத்தில் 6.1 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கும் பதிவாகியுள்ளது. மேலும், பிரெஞ்ச் பாஸ், அப்பர் ஹட், லோயர் ஹட், வெலிங்டன், வாங்கனுய், பராபரமு, லெவின், பொரிருவா, வேவர்லி, மாஸ்டர்டன், மார்ட்டின்பரோ, ஹன்டர்வில்லே, ஹவேரா, நெல்கென், பொங்கரோவா, ஸ்ட்ராட்ஃபோர்ட், பால்மர்ஸ்டன் நார்த், ஃபீல்டிங், பிக்டன், எகெடஹுனா, ப்ளென்ஹெய்ம், செடான், ஓபுனேக், தைஹாபே, காசில்பாயிண்ட், மோட்யூகா, ஒஹாகுனே மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் இந்த அதிர்ச்சி உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடுகள் குலுங்கியதால் அச்சம் அடைந்த மக்கள் வீதியில் தஞ்சமடைந்துள்ளனர். ஏற்கனவே கேப்ரியல் புயலால் வெள்ளம் ஏற்பட்டு கடும் சேசத்தை சந்தித்த நிலையில் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவரை பொதுமக்கள் யாரும் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகவில்லை.