இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படத்தின் மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் நேற்று நடந்த இசை நிகழ்ச்சியின் போது, பாடகர் கைலாஷ் கெர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வின் போது பாடகர் மீது பாட்டில் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி, கெர் மீது பாட்டிலை வீசிய நபரை கைது செய்தனர்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செல்பி எடுத்துக் கொள்ள முயன்ற இளைஞரின் செல்போனை நடிகர் சிவகுமார் தட்டிவிட்ட வீடியோ சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பாலிவுட்டிலும் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து பிரபலமடைந்த நடன கலைஞர் ரமேஷ் என்பவர் நேற்று தனது பிறந்த நாளில், மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தமிழ் சினிமாவின் பிரபல சண்டை பயிற்சியாளராக ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த ஜூடோ ரத்னம் இன்று காலமானார். அவருக்கு வயது 93.
பிரபல நடிகர் மனோபாலா உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் ஆர் ஆர் ஆர். இந்த படத்தில் நாயகர்களாக ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் நடித்திருப்பர். எம்எம் கீரவாணி இசையில் நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருது பெற்றிருந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இந்திய மொழிகளில் சக்கைப் போடு போட்டதோடு நில்லாமல் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளிலும் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. 1000 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற இந்த படம் தற்போது ஜப்பானிலும் வெளியாகி சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது. வசூலை வாரிக் குவித்து வருகிறது ஆர் ஆர் ஆர். இப்போது வரை 41 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளது படம். கடந்த ஆண்டு வரை ஜப்பானில் நன்கு வசூல் செய்த இந்திய படமாக ரஜினிகாந்த் நடித்த முத்து படமே இருந்துள்ளது. இந்நிலையில், முத்து படத்தை விட இரு மடங்கு வசூலைப் பெற்றுள்ளது ஆர் ஆர் ஆர். ஆனாலும் முத்து படம் 1998ம் ஆண்டிலேயே 20 கோடியைக் கடந்திருந்தது. இது மிகப் பெரிய சாதனையாகும்.
இந்திய நடிகர் ஒருவருக்கு மிக அதிக அளவில் ரசிகர்கள் குவிகிறார்கள் என்றால் சந்தேகமே இன்றி அது ஷாருக்கான்தான் என பலரும் கூறுவார்கள். அவர் யார் என்பதை கடந்த 4 ஆண்டுகளாக தெரியாமல் இருந்தவர்களுக்கு நிரூபிக்கும் வகையில் படம் திரையிடப்படுவதற்கு முன்பே 200 கோடி ரூபாய் வசூலை உறுதிப்படுத்தியுள்ளது. பதான் படத்தின் புக்கிங் தொடங்கியதுமே சடசடவென டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இப்போது வரை முதல் நாளிலேயே 50 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடந்துள்ளதாம். நாளை வெளியாகும் இந்த படம் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என இப்போதே பல தியேட்டர்களின் டிக்கெட்கள் தீர்ந்துவிட்டனவாம். அதிலும் குறிப்பாக 30 சதவிகிதம் தென்னிந்திய திரையரங்குகள் என்கிறார்கள். இந்த வாரம் இறுதியில் 200 கோடி வசூலை உலகம் முழுவதும் நிகழ்த்தும் சாதனைப் படமாக இந்த பதான் பார்க்கப்படுகிறது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் சேர்ந்து நடித்துள்ள இந்த ஆக்ஷன் படத்தில் பெரிய அளவில் கதை எதுவும் இல்லை என ரசிகர்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர். 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானை திரையில் காண்பது தொடங்கி, ஷாருக்கான் - ஜான் ஆப்ரகாம் இணை, தீபிகா படுகோன், சித்தார்த் ஆனந்த் இயக்கம் என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தென்னிந்தியாவிலும் கடந்த பொங்கலுக்கு பெரிய பெரிய படங்கள் வெளியாகியிருந்த நிலையில், இந்த வாரம் சொல்லிக்கொள்ளும் வகையில் பெரிய படங்கள் இல்லை என்பதால் நிச்சயம் வேற லெவலில் வசூல் மழை பொழியும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்தியாவின் பெரிய இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் ஹாலிவுட்டின் பெரிய இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் ஆகிய இருவரும் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவின் பின்னணியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.