Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,012.05
-736.37sensex(-1.01%)
நிஃப்டி21,817.45
-238.25sensex(-1.08%)
USD
81.57

கரூர்

கரூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.. | Karur Power Shutdown Today

Priyanka Hochumin July 05, 2023

இந்தப் பதிவின் மூலமாக ஜூலை 2023 மாதத்தில் கரூர் மாநகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் எந்தெந்த இடங்களில், எந்தெந்த நாட்களில் மின்தடை செய்யப்படுகிறது என்பதை காணலாம். இதன் மூலம் மின்சாரத்தை பயன்படுத்தி ஏதேனும் முக்கிய பணிகள் இருந்தாலும் செய்துக்கொள்ள முடியும். பராமரிப்பு பணிக்காக கீழ்கண்ட பகுதிகளில் காலை 09:00 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிவடைந்தால் மதியம் 04:00 மணிக்கு முன் விநியோகம் தொடங்கப்படும். சில சமயங்களில் நீட்டிப்பு பணிகள் இருந்தால், மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படலாம்.

செந்தில்பாலாஜி பூரண குணமடைய பிரார்த்தனை - கரூரில் திமுவினர் மொட்டை அடித்து வழிபாடு..!

Saraswathi June 24, 2023

சென்னை காவேரி மருத்துவமனையில் பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் செந்தில்பாலாஜி விரைவில் பூரண குணமடைய வேண்டி, கரூரில் திமுகவினர் மொட்டையடித்து பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர்.  சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, தற்போது பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கரூரில் உள்ள  தாந்தோணிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் திமுகவினர் 10 பேர் மொட்டை அடித்து வேண்டுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து, கரூர் தெற்கு மாநகர பகுதி திமுக செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில், 41வது வார்டு திமுக செயலாளர் விஸ்வா ஏற்பாட்டில் பெருமாளுக்கு சிறப்புப் பூஜை நடத்தப்பட்டு, கோவில் வளாகத்தில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.   கரூரில் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவரும் நிலையில், திமுகவினர் மொட்டை அடித்து, அன்னதானம் வழங்கி அமைச்சர் செந்தில்பாலாஜிக்காக வேண்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் 2வது நாளாக நீடிக்கும் வருமானவரி சோதனை - நகைக் கடையில் அதிகாரிகள் குழு ஆய்வு!

Saraswathi June 24, 2023

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் நேற்று வருமானவரித்துறை இரண்டாவது முறையாக சோதனை மேற்கொண்ட நிலையில், அந்த சோதனை 2வது நாளாக இன்றும் நீடிக்கிறது. கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 25-க்கு மேற்ப்பட்ட இடங்களில் கடந்த மாதம் 26.ஆம் தேதி தொடங்கிய வருமானவரித்துறை சோதனை 8 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இதையடுத்து, நேற்று 2வது முறையாக வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று கரூர் வந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன்படி, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோதை நகர் பகுதியில் அமைந்துள்ள சக்தி மெஸ் உரிமையாளர்கள் கார்த்திக் மற்றும் அதிபர் ரமேஷ் ஆகிய இருவரின் சீல் வைக்கப்பட்ட வீடுகளில் சீலை அகற்றிவிட்டு சோதனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் என்பவரின் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வீடு மற்றும் காமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள பி.எஸ்.கே பில்டர்ஸ், பொறியாளர் பாஸ்கர் அலுவலகம், வையாபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடிட்டர் அலுவலகம்,காளிபாளையம் பெரியசாமி வீடு மற்றும் ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள பழனி முருகன் நகை கடை என 7 இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடத்தி வருமானவரித்துறை அதிகாரிகள் பரபரப்பை ஏற்படுத்தினர். இந்நிலையில், நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்ட இடங்களில் கரூர் ஜவகர் பஜார் பகுதியில் உள்ள பழனிமுருகன் நகைக்கடையில் மட்டும் இன்று காலையும் வருமானவரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்திவருகின்றனர். இதையடுத்து, ஜவஹர் பஜார் பகுதியில் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது எதிரொலி - கரூரில் பல இடங்களில் போலீசார் குவிப்பு! | Minister Senthilbalaji

Saraswathi June 14, 2023

தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது சொந்த மாவட்டமான கரூரில் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.   அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை, கரூர் இல்லங்கள் உட்பட பல இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 18 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்குப்பின், அது தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை இல்லத்திலேயே விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, அவரை மேல்விசாரணைக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகள் முயன்றபோது, அமைச்சருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சரைப் பார்க்க வழக்கறிஞர்கள் உள்ளிட்ட யாருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை என திமுக வழக்கறிஞரும், எம்.பியுமான என்.ஆர்.இளங்கோ குற்றம்சாட்டியிருந்தார். குற்றவியல் சட்ட விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாமல், விசாரணைக்கான காரணத்தைத் தெரிவிக்காமல் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அழைத்துச் சென்றதாகக் குற்றம்சாட்டிய அவர், அமலாக்கத்துறையின் இந்த விதிமீறல் தொடர்பாக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், செந்தில்பாலாஜி மீதான இந்த வழக்கை தாம் எடுத்து நடத்தவிருப்பதாகவும் அவர் அப்போது கூறினார்.   இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளபோது, அவர் எந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை உறுதியாகத் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், சட்ட வல்லுநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது எதிரொலியாக கரூரின் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் தயார் நிலையில் இருக்குமாறும் கரூர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், அமைச்சர் செந்தில்பாலாஜி சிகிச்சை பெற்றுவரும்  சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் கூடுதல் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மற்றும் தமிழக போலீசார் குவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நீரில் மூழ்கி பலியான 4 மாணவிகளின் விவகாரத்தில் அடுத்தடுத்து பரபரப்பு..

Nandhinipriya Ganeshan February 16, 2023

கரூர் மாவட்டம் மயனூர் ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த விவகாரத்தில் மாணவிகளை ஆற்றிற்கு அழைத்து சென்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் 15 பேர் திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனையார் பொறியில் கல்லூரியில் நடைபெறும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நேற்று உடற்கல்வி ஆசிரியருடன் சென்றுள்ளனர்.

கரூரில் மேலும் ஒரு அதிர்ச்சி..! இரண்டு நாள்கள் கழித்து கழிவுநீர் தொட்டியில் மீண்டும் ஒருவர் இறந்த நிலையில் மீட்பு...

Gowthami Subramani November 17, 2022

கரூரில் விஷவாயு தாக்கியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே, கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் படி, கரூர் மாவட்டத்தில் சுக்காலியூர், காந்தி நகர் பகுதியில் குணசேகரன் என்பவரின் புதிய வீடு ஒன்று கட்டுமான பணி நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னராகவே, கழிவுநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்ட கழிவுநீர் தொட்டியில் கான்கிரீட் சவுக்கு மரங்கள் மற்றும் பலகைகளை அகற்றும் வேலைகள் இருந்துள்ளன.

விடாத கனமழை.. கடல்போல் காட்சி அளிக்கும் அணை.. இந்த பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. 

Nandhinipriya Ganeshan November 14, 2022

கரூர் அருகே அமராவதி ஆற்றில் கட்டப்பட்ட அணைப்பாளையம் தடுப்பணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக உடுமலை அமராவது அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரூர் மாவட்டத்தில் ராஜபுரம், செட்டிப்பாளையம், அணைப்பாளையம், ஆண்டாங்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கரூர் பவர்கட் எங்கெங்கே எப்போது ? - அக்டோபர் 1 முதல் அக்டோபர் 31 வரையிலான அட்டவணை

UDHAYA KUMAR September 29, 2022

பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இரும்புகுழி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி, பாலவிடுதி, தலைவாசல், புதுவாடி, பாலவிடுதி கோடாங்கிபட்டி,சின்னம்பட்டி,சடையம்பட்டி,வெள்ளபட்டி,பூலாம்பட்டி,கொசூர்,பள்ளிகவுண்டனூர்,தந்திரிப்பட்டி,ஒட்டப்பட்டி,சந்தையூர்,சிந்தாமணிப்பட்டி,பணிக்கம்பட்டி,வளையபட்டி,எருமநாயக்கன்பட்டி,மேட்டுப்பட்டிபட்டிக்காபட்டி,மருதூர்,நாடுபட்டிமத்தப்பட்டிபட்டி,நாடுபட்டி புனவாசிபட்டி,ஆந்தரப்பட்டி, மகிழிப்பட்டி, பொட்டம்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, மத்திப்பட்டி, பாலப்பட்டி, நச்சலூர், நல்லூர், அர்த்தம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி, கல்லை, தோகமலை, தெலுங்கப்பட்டி,சின்னப்பருந்தலுார் வேம்பதுராம்பட்டி, கே.துறையூர், முட்டக்கன்பட்டி, கூடலூர், ரக்கம்பட்டி, குன்னகவுண்டம்பட்டி, அய்யர்மா லை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, கொட்டமேடு, எறும்புதிப்பட்டி, கருங்கல்லப்பள்ளி, கனகப்பிள்ளையூர், கோடாங்கிபட்டி, குப்பாச்சிபட்டி, வயலூர், கட்டரைப்பட்டி, வேப்பங்குடி, வடுகபட்டி, மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், வடுகபட்டி, மஹாதானபுரம், கிருஷ்ணராயபுரம் சின்னசெங்கல், கீழமுனையனூர்

மொத்தம் 164 நாடுகளில்...கரூர் அரசு பள்ளி மாணவன்...இளம் ஐன்ஸ்டீன் பட்டம் வென்று சாதனை!

Priyanka Hochumin September 16, 2022

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கும் வரட்சியான பகுதிகளில் ஒன்று பஞ்சப்பட்டி. அங்கு செயல்பட்டு கொண்டிருக்கும் அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் இருந்து தனபால் என்னும் ஆசிரியர் வழிகாட்டுதலுடன் 11-ம் வகுப்பு படிக்கும் பூவரசன் என்ற மாணவர் சர்வதேச அளவில் `இளம் ஐன்ஸ்டீன்' விருது பெற்றிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் மொத்தம் 164 நாடுகளில் இருந்து மத்திய, மாநில பாடத்திட்டத்தில் பயிலும் அனைத்து பள்ளிகளில் இருந்து 43 படைப்புகள் சர்வதேச அளவில் பங்குபெற்றன. பூவரசன் கண்டுபிடிப்பு - அலைபேசி ப்ளூடூத் மூலம் ரோபோவை கட்டுப்படுத்தும் இயந்திரத்தை காட்சியளித்தார்.

அழகான பெண் என்று ஏமாந்த 8 இளைஞர்கள்...அதுல இன்னும் 2 வெய்டிங் லிஸ்ட்...அலேக்காக மாட்டிய கல்யாண ராணி!

Priyanka Hochumin September 16, 2022

Karur District News Tamil: கரூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இதுவரை 8 பேரை திருமணம் செய்து பணத்தை ஏமாற்றிய பெண், அடுத்து திருமணம் செய்ய போகும் மாப்பிளையால் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார். தனக்கு அமைச்சரை தெரியும் என்னவும் தான் பெரிய இடத்து பெண் என்று நாடகம் ஆடி இதுவரை லட்சக்கணக்கில் ஏமாற்றிய பெண், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்ய போகும் மாப்பிளையால் கையும் களவுமாக மாட்டியுள்ளார். விசாரித்ததில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.