Nandhinipriya Ganeshan July 02, 2023
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருநாள் மின்தடை (மாதாந்திர பவர் கட்) அறிவிக்கப்படும். அதன்படி, அனைத்து இடங்களிலும் வெவ்வேறு மணி நேரத்தில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரையிலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின்சார வாரியத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தேதியில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இருப்பினும், சில சமயங்களில் மோசமான வானிலை, அதிக மழை, வெள்ளம் உள்ளிட்ட வேறு சில காரணங்களுக்காகவும் மின்தடை ஏற்படலாம். ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் இவை சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும். இது குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள மின்சாரத் துறையை அணுகலாம். ஆனால், இவ்வாறு தடை செய்யப்படும் மின்தடை, மாதாந்திர மின்தடையுடன் சம்பந்தப்படுத்தபடாது. இந்தப் பதிவின் மூலமாக ஜூலை 2023 மாதத்தில் தஞ்சாவூர் மாநகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் எந்தெந்த இடங்களில், எந்தெந்த நாட்களில் மின்தடை செய்யப்படுகிறது என்பதை காணலாம். இதன் மூலம் மின்சாரத்தை பயன்படுத்தி ஏதேனும் முக்கிய பணிகள் இருந்தாலும் செய்துக்கொள்ள முடியும். தஞ்சாவூர் மின்தடை பகுதிகள் ஜூலை 2023: பராமரிப்பு பணிக்காக கீழ்கண்ட பகுதிகளில் காலை 09:00 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிவடைந்தால் மதியம் 04:00 மணிக்கு முன் விநியோகம் தொடங்கப்படும். சில சமயங்களில் நீட்டிப்பு பணிகள் இருந்தால், மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படலாம். விரைவில் அப்டேட் செய்யப்படும்... குறிப்பு: இதில் கொடுக்கப்பட்ட விவரங்கள், பல்வேறு இணையதளங்களில் இருந்து பெறப்பட்டதாகும். எனவே, மின்தடை குறித்த மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ள அந்தந்த பகுதியின் மின்வாரியங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
Nandhinipriya Ganeshan June 26, 2023
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருநாள் மின்தடை (மாதாந்திர பவர் கட்) அறிவிக்கப்படும். அதன்படி, அனைத்து இடங்களிலும் வெவ்வேறு மணி நேரத்தில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரையிலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின்சார வாரியத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தேதியில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இருப்பினும், சில சமயங்களில் மோசமான வானிலை, அதிக மழை, வெள்ளம் உள்ளிட்ட வேறு சில காரணங்களுக்காகவும் மின்தடை ஏற்படலாம். ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் இவை சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும். இது குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள மின்சாரத் துறையை அணுகலாம். ஆனால், இவ்வாறு தடை செய்யப்படும் மின்தடை, மாதாந்திர மின்தடையுடன் சம்பந்தப்படுத்தபடாது. இந்தப் பதிவில் ஒவ்வொரு மாதத்திற்கும், தர்மபுரி மாநகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் எந்தெந்த இடங்களில், எந்தெந்த நாட்களில் மின்தடை செய்யப்படுகிறது என்பதை காணலாம். இதன் மூலம் மின்சாரத்தை பயன்படுத்தி ஏதேனும் முக்கிய பணிகள் இருந்தாலும் செய்துக்கொள்ள முடியும். தர்மபுரி மின்தடை பகுதிகள் ஜூன் 2023: பராமரிப்பு பணிக்காக கீழ்கண்ட பகுதிகளில் காலை 09:00 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிவடைந்தால் மதியம் 04:00 மணிக்கு முன் விநியோகம் தொடங்கப்படும். சில சமயங்களில் நீட்டிப்பு பணிகள் இருந்தால், நேரம் மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படலாம். குறிப்பு: இதில் கொடுக்கப்பட்ட விவரங்கள், பல்வேறு இணையதளங்களில் இருந்து பெறப்பட்டதாகும். எனவே, மின்தடை குறித்த மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ள அந்தந்த பகுதியின் மின்வாரியங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
தஞ்சை: தமிழ்நாட்டில் இருந்து பீகாருக்கு யாரும் வேலைக்கு செல்லவில்லை என்றும், பீகாரில் இருந்து தமிழ்நாட்டிற்கு அதிகம் பேர் வேலைக்கு வந்துள்ளதாகவும், அதில் ஆளுநரும் ஒருவர் என அமைச்சர் எ.வ வேலு விமர்சனம் செய்துள்ளார்.
நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவ நெல் கொள்முதலில் 50 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து , கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்குவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும் என விவசாய சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
செங்கமலம் யானைக்கு நீச்சல் குளம் கட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், கோயில் வளாகத்தில் ஈசானிய மூலையில் சுமார் ஆறரை அடி ஆழத்தில் 500 சதுர அடி பரப்பளவில் ரூ.10 லட்சம் மதிப்பில் செங்கமலம் யானை குளித்து மகிழ புதிதாக நீச்சல் குளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து,அதனை இன்று மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார். அந்த நீச்சல் குளத்தில் யானை பாப் கட்டிங் செங்கமலம் குளித்து நீராடி மகிழ்ந்தது.
யுனெஸ்கோ அமைப்பின் உலக கலாச்சார பாரம்பரிய மரபுச் சின்னங்களில் ஒன்றான தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் ஒரு வார காலத்திற்கு ஒன்றிய அரசு ஏற்பாடு செய்துள்ள மின்விளக்கு அமைப்புகளை நிரந்தரமாக அமைத்திட வேண்டுமென சுற்றுலா பயணிகளும், உள்ளூர் வாசிகளும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜி20 அமைப்பிற்கு டிசம்பர் 1ம் தேதி முதல் ஓராண்டுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட 100 பாரம்பரிய சின்னங்கள் ஜி-20 அடையாள சின்னத்துடன் ஜொலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில் கோட்டை சுவற்றில் ஜி- 20 மாநாடு சின்னத்தை ப்ரொஜெக்டர் மூலம் பிரதிபலிப்பதுடன், கோவில் சுற்றுச்சுவர் வெள்ளி நிறத்தில் ஜொலிக்க விடப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 8 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள குறிச்சி என்ற கிராமத்தில் ஐபிஇஏ என்ற தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த பல்வேறு மாணவ மாணவியரும் இந்த பள்ளியில் படிக்கும் நிலையில், அவர்களுக்காக பள்ளி பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை பள்ளி வேன் ஒன்று அதம்பை எனும் கிராமத்திலிருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலுள்ள வயலுக்குள் சென்று விபத்துக்குள்ளானது.
Editorial Desk November 24, 2022
சீர்காழி மற்றும் கொள்ளிடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. வடகிழக்கு பருவ மழையால் கடந்த நவம்பர் மாதம் 11 மற்றும் 12ம் தேதிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, கொள்ளிடம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. மழை நீர் சூழ்ந்ததால் வீடு மற்றும் விளைநிலங்களில் பாதிப்பை எதிர்கொண்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இன்று அரசு சார்பில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி சீர்காழி அருகே மணி கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் நிகழ்வை தொடங்கிவைத்தார். இதன் மூலம் இன்று முதற்கட்டமாக மணி கிராமத்தைச் சேர்ந்த 893 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவில் மொத்தம் 238 ரேசன் கடைகளில் 1,61,647 குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
Editorial Desk November 24, 2022
கடந்த எட்டு ஆண்டுகளாக நாச்சியார் கோவில் பகுதியில் 8 குளங்கள் காணாமல் போய் உள்ளது. அது தொடர்பாக 8 ஆண்டுகளாக அரசுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்து தேசியக் கொடியுடன் கும்பகோணத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்திற்கு வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில், திருநறையூர், சமர்த்தனார்குடி, போன்ற இடங்களில் இருந்த எட்டு குளங்கள் கடந்த சில ஆண்டுகளாக காணாமல் போய்விட்டது எனவும், இது தொடர்பாக 8 ஆண்டுகளாக அரசிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்து, சட்டை இன்றி கும்பகோணத்தில் இன்று நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த கோவிந்த வல்லப பந்த் என்ற சமூக ஆர்வலரின் செயல் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.