Thu ,Mar 23, 2023

சென்செக்ஸ் 57,875.31
246.36sensex(0.43%)
நிஃப்டி17,050.55
62.15sensex(0.37%)
USD
81.57

டெக் செய்திகள்

சூப்பரான சிறப்பம்சங்களுடன் ரூ.9,999-க்கு விற்பனைக்கு வந்த OnePlus Buds Pro 2R..!

Gowthami Subramani March 17, 2023

ஒன்பிளஸ் பிராண்டு அனைவரும் விரும்பு பிராண்டு ஆகும். இந்த ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஒன்பிளஸ் லேட்டஸ்ட் OnePlus Buds Pro 2R-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் Buds Pro 2, OnePlus 11, OnePlus 11 R உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டது.

அடேங்கப்பா.. என்னா லுக்! அட்டகாசமான தோற்றத்தில் வெளியாக உள்ள Nokia Magic Max.! | Nokia C99 Specifications

Gowthami Subramani March 16, 2023

சமீப காலமாக, நோக்கியா நிறுவனம் புது புது அப்டேட்டை வெளியிட்டு வருகிறது. அதன் படி நோக்கியா அதன் லோகோவை மாற்றியுள்ளது. தற்போது, நோக்கியா புதுவிதமான இரண்டு நவீன ஸ்மார்ட்போன்கள் மாடல்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இவை இரண்டுமே சந்தைக்கு இந்த ஆண்டுக்குள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இந்த புதிய மொபைல் விலை, அறிமுகப்படுத்தப்படும் நாள், உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.

விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 5ஜி.! நீங்க எதிர்பார்த்தது போல மிக மலிவான விலையில்..

Gowthami Subramani March 15, 2023

ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமானது மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்ய உள்ளது. இந்த ஆண்டு, இந்த மொபைல் அறிமுகம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள மொபைல் ஆனது OnePlus Nord 3 Series ஆகும். இது ஏப்ரல் 4 ஆம் நாள் அறிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஜியோவின் குறைந்த விலை அதிக பயன் பிளான் இத்தனை OTT தளங்கள் ஃபிரீயா? | Jio Postpaid Plans

Priyanka Hochumin March 08, 2023

இந்தியாவில் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளன. ஆனால் மக்களுக்கு குறைந்த விலையில் அதிக பலன் கிடைக்கும் வகையில் ஜியோ நிறுவனம் பல போஸ்ட்பெய்டு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ரூ.1000/-க்குள் பயனர்களுக்கு பல சலுகைகளை வழங்கும் திட்டங்களைப் பற்றி பாப்போம். இந்த திட்டத்தின் கீழ் மாதம் 75ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் ஆகியவை கிடைக்கும். மேலும் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆகியவற்றிற்கான ஒரு வருட சந்தா இலவசமாக கிடைக்கிறது.

நம்ப முடியாத விலையில் சாம்சங் மொபைல்.! இத தான் எதிர்பார்த்தீங்க. உடனே முந்துங்க..

Gowthami Subramani March 07, 2023

சாம்சங் கேலக்ஸி மொபைல் ஆனது, ஃபிளிப்கார்ட் ஆஃபரில் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. Samsung M53 5G மொபைல் ஆனது, தற்போது சந்தையில் வெளியிடப்பட்ட புதிய ஸ்மார்ட்போன் ஆகும். இது, வாடிக்கையாளர்களுக்கு புதுவித அம்சங்களை வழங்குகிறது. இதன் அற்புதமான அம்சங்களும் வடிவமைப்பும் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் அமைகிறது. இது சந்தையில் ரூ.32,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வேலை தேடுபவர்களே ஜாக்கிரதை..! இப்டி தான் ஹேக்கர்ஸ் உங்களை குறிவைக்கிறார்களாம்..

Nandhinipriya Ganeshan March 03, 2023

கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு உலகளவில் பொருளாதார சூழல் ரொம்பவே மோசமான நிலையை எட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல், பெரிய நிறுவனங்கள்கூட தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதனால், நம்மில்பலரும் வேலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். இந்த சூழலைப் பயன்படுத்தி கொண்டு ஹேக்கர்ஸ் முக்கியமான தகவல்களைத் திருடும் முயற்சியில் வேலை தேடுபவர்களை குறிவைத்து வருகிறார்களாம். அதற்காக ஃபிஷிங் மற்றும் மால்வேர் கேம்பகென்ஸ் பயன்படுத்துவதாகவும் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ட்ரெல்லிக்ஸ் தெரிவித்துள்ளது. போலி நிறுவனங்கள் அல்லது ஆட்சேர்ப்பு முகவர்களிடமிருந்து வேலை தேடுபவர்களுக்கு அனுப்பப்படும் போலி மின்னஞ்சல்கள், அல்லது தனிப்பட்ட தகவல் அல்லது உள்நுழைவு சான்றுகள் மூலமாக ஒருவரது முக்கிய தரவுகள் திருடப்படுகின்றன. அவர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் பார்ப்பதற்கு உண்மையானதாக தோன்றும், ஆனால் ஃபினான்சியல் தரவு அல்லது கடவுச்சொற்கள் போன்ற முக்கியமான தகவல்களை அதன் முக்கியமான நோக்கமாகும். அதுமட்டுமல்லாமல், வேலை தேடுபவர்களிடம் URLகளை அனுப்பி அவர்களின் சாதனங்களை மால்வேர் மூலம் பாதிக்கக்கூடிய தளங்களுக்கு வரவழைக்கின்றன அல்லது சேதப்படுத்தும் மென்பொருளைப் பதிவிறக்கவும் செய்கின்றன. இந்த மால்வேர் தரவை திருடி பாதிக்கப்பட்டவரின் சாதனத்தை ஹேக் செய்துவிடுகின்றனர். இதுஒருபக்கம் இருந்தாலும், மறுபுறம் ஹேக்கர்ஸ் வேலை தேடுபவர்கள்போல் காட்டிக்கொண்டு, வேலை விண்ணப்பங்களாக மாறுவேடமிட்ட இணைப்புகள் அல்லது URLகள் மூலம் தீம்பொருளை விநியோகிப்பதன் மூலம் நிறுவனங்களை குறிவைப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்கியமான தகவலுக்கான அங்கீகாரமற்ற அணுகலைப் பெறுதல், தனிப்பட்ட தரவைத் திருடுதல் மற்றும் ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை சீர்குலைக்கும் நோக்கத்தில் இது போன்ற தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

Nokia-வின் புதிய அவதாரம்...60 ஆண்டு பழமையான லோகோ மாற்றம் | Nokia Logo change News in Tamil

Priyanka Hochumin February 28, 2023

பின்லாந் நாட்டை பிறப்பிடமாகக் கொண்டு உருவான நோக்கியா நிறுவனம், உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்ந்து வந்தது. 90-களில் உலகில் அனைவரின் வீட்டிலும் இருந்தது நோக்கியா செல்போன் தான். பின்னர் அதிகப்படியான மக்கள் செல்போன் பயன்படுத்த தொடங்கியதால் சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் கால் பதித்தனர். அவர்களுடன் போட்டியிட முடியாமல் பொருளாதாரம் மற்றும் சந்தையிலும் பின்னடைவை சந்தித்தது நோக்கியா நிறுவனம்.

Nokia | 60 ஆண்டுகளுக்கு பிறகு நோக்கியா கொண்டு வந்த புதிய மாற்றம்.. ரசிகர்களுக்கு சர்பிரைஸ்..

Nandhinipriya Ganeshan February 27, 2023

உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வந்தது தான் பின்லாந்தை சேர்ந்த நோக்கிய நிறுவனம். அந்த காலத்தில் மொபைல் துறையின் ராஜா என்றே சொல்லலாம். குறிப்பாக, 90ஸ் கிட்ஸ்களுக்கு முதன் முதலில் செல்போன் என்ற ஆசையை தூண்டியதே இந்த நோக்கியா ஃபோன் என்று சொன்னால் மறுப்பதற்கு இல்லை. ஆனால், காலப்போக்கில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வருகையால் நோக்கிய மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது.

வெறித்தனமான புது கேமுடன் வரும் PUBG...கேம் பிரியர்கள் உற்சாகம் | New PUBG Game

Priyanka Hochumin February 24, 2023

இந்தியாவில் PUBG மொபைல் மற்றும் BGMI போன்ற பிரபலமான கேம்களை உருவாக்கி உலகின் மிகவும் பிரபலமான மல்டிபிளேயர் ஆன்லைன் கேம்களுக்கு உரிமையான கிராஃப்டன் புதிய விளையாட்டை இந்திய சந்தையில் கொண்டு வருகிறது. இவர்களின் துணை நிறுவனமான ட்ரீமோஷன், Road to Valor: Empires என்ற புதிய கேமை அறிமுகப்படுத்துகிறது. அதிகாரபூர்வ அறிமுகம் செய்யப்பட்டாலும் தற்போது இந்திய சந்தையில் முன் பதிவு செய்யப்பட்டு வருகிறது. முன் பதிவு செய்த வாடிக்கையாளர்கள் மட்டும் இந்த கேமை விளையாண்டு மகிழ முடியும்.

UPI மற்றும் PayNow இணைப்பு மோடி புகழாரம் | UPI and PayNow Merging

Priyanka Hochumin February 21, 2023

இணையவழியில் பரிவர்த்தனை செய்யப்படும் இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow இணைப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை இந்திய பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லி சியென் லூங் முன்னிலையில் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இந்த இணைப்பின் முதல் பரிவர்த்தனையை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இயக்குனர் ரவி மேனன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.