Nandhinipriya Ganeshan August 09, 2023
சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரம் மிக முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டதே இந்த 'இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம்'. இந்த திட்டத்தின் கீழ் சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணிநேரத்தில் ஏற்படும் மருத்துவ செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும். மேலும், பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்ப்பவருக்கு ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும். இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பற்றிய விவரங்கள் மாவட்டம் வாரியாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றை அறிந்துக்கொண்டு பயன்பெறுங்கள்.
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கு திட்டத்தை தமிழக அரசு வரும செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக முதல்வர் முக ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு திட்டத்தை விரைந்து செயல்படுத்த உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் முகாம்கள் மற்றும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்கள் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான விண்ணப்பங்களையும் வெளியிட்டனர். மேலும் விண்ணப்பங்களை வீட்டிற்கே வந்து வழங்கியும் விவரங்களை பெற அதிகாரிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தன்னார்வலர்களை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற கைரேகை விரல் பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து ரேஷன் கடைகளில் உள்ள கைரேகை பதிவு இயந்திரங்களை புதுப்பிக்கவும், வரும் 17ஆம் தேதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கைரைகை பதிவு இயந்திரம் இருப்பதை உறுதி செய்யவும் அரசு அறிவித்துள்ளது.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான தேசிய கொள்கை ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்த உத்தரவிடக்கோரி சி.குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ. இளையபெருமாள், அரசு தரப்பில் ப்ளீடர் பி. முத்துக்குமார், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆர். அனிதா ஆகியோர் ஆஜராகினர். அரசு தரப்பு வாதத்தில், மூத்த குடிமக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் வசிக்கும் மூத்த குடிமக்களின் விவரத்தை சேகரித்து வைக்கவும், அவர்கள் ஏதேனும் புகாரளித்தால் அதற்கு முன்னுரிமை கொடுத்து, அதனை தீர்த்து வைக்கவும் தமிழக டிஜிபி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Link Aadhaar With PAN Card: இந்தியாவில் குறிப்பிட்ட சில மக்களுக்கு மட்டும் ஆதார் பான் எண் இணைப்பது கட்டாயமல்ல என்று வருமானவரித் துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) மூலம் அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க விரும்பினால், உடனடியாக அதை செய்துமுடிக்க தொழிலாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
Priyanka Hochumin April 07, 2023
தமிழகத்தில் வாழும் மக்கள் ரேஷன் அட்டையை தொலைத்து விட்டாலோ அல்லது அதில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றாலோ அல்லது புதிய ரேஷன் அட்டையை வாங்க வேண்டும் என்றாலோ இடைத்தரகர்கள் மூலம் தான் வாங்க வேண்டியதாக இருந்தது. ஆனால் கடந்த 2020 முதல் ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு பதிவை அமல்படுத்திய தமிழக அரசு. ஆனால் இந்த முறை அதில் இருந்து சற்று மேம்படுத்தி, புதிய ரேஷன் அட்டையை ஆன்லைன் மூலம் பதிவு செய்தால் தபால் வழியாக வீட்டிற்கு கொண்டு சேர்க்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
Priyanka Hochumin February 08, 2023
திமுக அரசு ஆட்சியை பிடிக்கும் போது பல வாக்குறுதிகளை வெளியிட்டது. அவற்றுள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தது "புதுமைப் பெண் திட்டம்". இது முற்றிலும் பெண்கள் கட்டாயம் கல்வி பெற வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவான திட்டமாகும். இத்திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடந்த நிகழ்வில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Gowthami Subramani February 05, 2023
ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி மாதம் 1 ஆம் நாள் நடைபெறும். இதில், வருமான வரி, சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட தகவல்களைப் பற்றிய ஆலோசனைகள் நடைபெறும். மேலும், மக்களின் நலனுக்காக புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
Gowthami Subramani December 22, 2022
இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்துமே இன்டர்நெட் பயணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றன. கிராமத்தின் நடுவே உள்ள சிறிய பெட்டிக் கடை முதல், நகரத்தில் உள்ள பெரிய மால் வரை ஆன்லைனில் இயங்கி வருகின்றன. இந்த பிஸியான சூழலில், மக்கள் தங்களுடைய வாழ்நாளில் ஒரு சில சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குறிப்பிடப்பட்ட சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற சூழலில் உள்ளனர்.
Gowthami Subramani December 10, 2022
திருமண பந்தத்தில் இருக்கும் தம்பதியினருக்கு, திருமணப் பதிவு என்பது கட்டாயமாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல், தமிழகத்தில் திருமணப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் தம்பதியினர் எப்படி திருமணச் சான்றிதழைப் பெறலாம் என்பது குறித்து காண்போம். 2009 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டத்தின் கீழ், திருமணத்தைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் படி, விசா பெறுவது, பாஸ்போர்ட் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்களுக்கு திருமணப் பதிவுச் சான்றிதழ் கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.