Thu ,Mar 23, 2023

சென்செக்ஸ் 57,875.31
246.36sensex(0.43%)
நிஃப்டி17,050.55
62.15sensex(0.37%)
USD
81.57

உலகம்

இறந்தவர்களின் உடலை சூப் வைத்து குடிக்கும் மக்கள்.. விநோத சம்பவம்.. | Yanomami Tribe

Nandhinipriya Ganeshan March 09, 2023

பொதுவாக, ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு விதமான சடங்கு, சம்பிரதாயம் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், ஒரு சில சடங்கு சம்பிரதாயங்கள் நம்மை ஆச்சரியபடுத்தும் விதமாகவும், இப்படி கூட இருக்கிறதா என்றும் சிந்திக்க வைக்கிறது. அப்படி தான் ஒரு நாட்டில் விநோதமான சடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

ஹாலிவுட் படம் பார்த்தா சிறுவர்களுக்கு இனி ஜெயில் தான்.! பெற்றோருக்கும் தண்டனை..!

Gowthami Subramani March 03, 2023

சிறுவர்கள், ஹாலிவுட், தென் கொரியாவின் படங்களைப் பார்த்தால் இனி 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என வெளிவந்துள்ள தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவில், அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தென்கொரியா மர்றும் மேற்கத்திய நாடுகளின் பழக்க வழக்கங்களைக் கடுமையாக தவிர்க்கும் ஆட்சியராக இவர் உள்ளார். வட கொரியாவில் மக்கள் ஆட்சியாக இல்லாமல், இவரின் குடும்ப ஆட்சியாகத் தான் நடைபெறுகிறது. வட கொரிய மக்களும் இந்த ஆட்சியையே பின்பற்ற வேண்டும் என சட்டங்களைக் கொண்டு வருகிறார்.

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அடுத்து சிக்கிய நாடு | Indonesia Earthquake Today

Priyanka Hochumin February 24, 2023

இன்று இந்தோனேஷியாவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இன்று தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அமைந்துள்ள இந்தோனேஷியாவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் டொபெலோ கடலுக்கு அடியில் 177 கிலோ மீட்டர் தூரத்தில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. என்ன தான் சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக இருந்தாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை.

துருக்கி - சிரியாவைத் தொடர்ந்து இங்கேயும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் | Tajikistan Earthquake News Today

Priyanka Hochumin February 23, 2023

உலக பகுதிகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நிலநடுக்கம். துருக்கி - சிரியாவைத் தொடர்ந்து தஜிகிஸ்தான் நாட்டிலும் 6.8 ரிக்டர் அளவுகோல் பதிவாகியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் நடந்த கொடூர சம்பவங்களில் துருக்கி - சிரியா நாட்டில் நடந்த நிலநடுக்கம் தான். அதனால் நாட்டின் பல பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்தன. பலி எண்ணிக்கை 50,000-ஐ தாண்டியுள்ளது. இன்னும் அந்த சோகத்தில் இருந்தே மீளவில்லை ஆனால் உலகத்தில் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒரு கோழியால் பறிபோன உயிர்.. உஷார் மக்களே!

Nandhinipriya Ganeshan February 21, 2023

ஒரு சேவல் கொலை பண்ணிருக்குனு சொன்ன உங்களால நம்ப முடியுதா? நாம் எந்த ஒரு உயிரனங்களையும் சாதாரணமாக நினைத்துவிடக்கூடாது என்பதற்கு உதாரணம் தான் இந்த கொலை சம்பவம். அயர்லாந்து கில்லாஹார்னியாவை சேர்ந்தவர் ஜாஸ்பர் க்ராஸ் (67). ஓய்வு பெற்ற குதிரை பயிற்சியாளரான இவர் வீட்டில் செல்லமாக ஒரு சேவலை வளர்த்துவந்துள்ளார். இந்த நிலையில், சென்ற வருடம் ஏப்ரல் 28 ஆம் தேதி தனது தோட்டத்தில் வெளியே சென்றபோது ஆசையாய் வளர்த்த சேவல் அவரின் இடது காலில் பின்னால் இருந்து தாக்கியுள்ளது. பறவைகளுக்கு ஆயுதமே அதன் நகங்கள் தான். அந்த நகம் தான் தற்போது ஒரு உயிரை பறித்துள்ளது. அதாவது, அந்த சேவல் அவரை தாக்கியதுடன் ஜாஸ்பர் காலில் இருந்து இரத்தம் பீச்சி அடித்து வெளிவந்துள்ளது. ஏற்கனவே இருதய நோயாளியான ஜாஸ்பர் இந்த காயத்தால் அதிகளவு இரத்தத்தை இழந்துள்ளார். இதனால் மயக்கம்போட்டு கீழே விழுந்துள்ளார், உடனடியாக அவரது மகள் பார்த்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அந்த நாளே பிற்பகல் 3.24 மணியளவில் அவர் இறந்துவிட்டாராம். இதுகுறித்து மருத்துவர்களிடம் விசாரித்ததில், இருதய நோயாளியான ஜாஸ்பர் நிறைய இரத்தத்தை இழந்ததால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்தனர்.

மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம்.! 14 நாள்களுக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்த துயரம்.!

Gowthami Subramani February 21, 2023

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், 3 பேர் பலியான சம்பம மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி மற்றும் சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் தேதி அதிகாலை காசியான்டெப் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 7.8 என்ற ரிக்டர் அளவில் பதிவிட்டிருந்தது. இந்த நிலநடுக்கமானது ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியதாக அமைந்தது.

கடுமையான மழையில் சிக்கி 24 பேர் பலி | sao paulo flooding today

Priyanka Hochumin February 20, 2023

தென்கிழக்கு பிரேசிலின் கடலோரப் பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலிய நகரமான இல்ஹபேலாவில் பெய்த கனமழையால் வீதிகளும் வீடுகளும் மழையால் சூழப்பட்டு கடும் சேதம் அடைந்தன. மரங்கள், மின் கம்பங்கள், கார்கள் அனைத்தும் மண்ணில் புதைந்தன. குடிநீர் விநியோகமும், போக்குவரத்தும் பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளது. மிகுந்த கவலையில் இருக்கும் அப்பகுதி மக்கள் அரசாங்கத்தின் உதவிக்காக காத்திருக்கின்றனர். அவர்கள் தங்கி இருக்கும் பகுதிகள் முற்றிலும் மோசமான நிலையில் இருப்பதால் பெரும் அவதிக்கு ஆளாகினர். 

முதுகில் இருந்து நீட்டமா வால்.. 6செ.மீ அளவு இருக்கும்! என்னோடயே பிறந்தது..!

Gowthami Subramani February 19, 2023

பிரேசிலில் குழந்தை ஒன்றின் முதுகில், ஆறு சென்டிமீட்டர் அளவுள்ள வால் இருந்ததைப் பார்த்து மருத்துவர்களே ஆச்சரியத்திற்கு உள்ளானார்கள். பிரேசில் நாட்டில், குழந்தை ஒன்றை அறுவை சிகிச்சை செய்து தாயின் வயிற்றிலிருந்து வெளியே எடுத்த போது, அவள் ஸ்பைனா பிஃபிடா என்ற அரிய நிலையுடன் பிறந்தார். பொதுவாக இது முதுகுத் தண்டு சாதாரண வளர்ச்சியைத் தவறுவதிலிருந்து ஏற்படுகிறது. இதன் விளைவாக வால் போன்று வளர்ச்சி அடையலாம்.

258 மணி நேரம் உயிரைக் கையில் பிடித்து வைத்திருந்த பெண்..! இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 42 வயது பெண்..

Gowthami Subramani February 17, 2023

இடிபாடுகளில் சிக்கி 10 நாள்களாக உயிரைக் கையில் பிடித்து வைத்திருந்த 42 வயது பெண் மீட்பு படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார். துருக்கியில் நடந்த அதி தீவிர நிலநடுக்கத்தால், அந்தப் பகுதி முழுவதும் உள்ள கட்டிடங்கள் விழுந்து இடிபாடுகளில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மீட்புப் படையினர் துருக்கியில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்றுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 40,000-ற்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கி இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

128 மணி நேரமாக இடிபாடுகளில் சிக்கிய குழந்தை! உயிருடன் வ்னஹ்து சிரித்த நெகிழ்ச்சி சம்பவம்..

Gowthami Subramani February 16, 2023

இடிபாடுகளில் சிக்கி 128 மணி நேரம் கழித்து குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி, துருக்கியை மையமாகக் கொண்டு 7.8 என்ற ரிக்டர் அளவுகோலில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், தற்போதைய நிலவரப்படி சுமார் 40,000-ற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இதில், மேலும் சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றூ வருகின்றனர்.