விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தரிசனம் செய்யலாம் என வனத்துறை அறிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற சதுரகிரி மலை. சித்தர்கள் அதிகம் வாழும் மலையாக கருதப்படும் இங்கு சுந்தரமகாலிங்கம் சுவாமிகள் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம்.
Nandhinipriya Ganeshan June 29, 2023
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருநாள் மின்தடை (மாதாந்திர பவர் கட்) அறிவிக்கப்படும். அதன்படி, அனைத்து இடங்களிலும் வெவ்வேறு மணி நேரத்தில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரையிலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின்சார வாரியத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தேதியில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இருப்பினும், சில சமயங்களில் மோசமான வானிலை, அதிக மழை, வெள்ளம் உள்ளிட்ட வேறு சில காரணங்களுக்காகவும் மின்தடை ஏற்படலாம். ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் இவை சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும். இது குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள மின்சாரத் துறையை அணுகலாம். ஆனால், இவ்வாறு தடை செய்யப்படும் மின்தடை, மாதாந்திர மின்தடையுடன் சம்பந்தப்படுத்தபடாது. இந்தப் பதிவின் மூலமாக ஜூலை 2023 மாதத்தில் விருதுநகர் மாநகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் எந்தெந்த இடங்களில், எந்தெந்த நாட்களில் மின்தடை செய்யப்படுகிறது என்பதை காணலாம். இதன் மூலம் மின்சாரத்தை பயன்படுத்தி ஏதேனும் முக்கிய பணிகள் இருந்தாலும் செய்துக்கொள்ள முடியும். விருதுநகர் மின்தடை பகுதிகள் ஜூலை 2023: பராமரிப்பு பணிக்காக கீழ்கண்ட பகுதிகளில் காலை 09:00 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிவடைந்தால் மதியம் 04:00 மணிக்கு முன் விநியோகம் தொடங்கப்படும். சில சமயங்களில் நீட்டிப்பு பணிகள் இருந்தால், மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படலாம். விரைவில் அப்டேட் செய்யப்படும்…. குறிப்பு: இதில் கொடுக்கப்பட்ட விவரங்கள், பல்வேறு இணையதளங்களில் இருந்து பெறப்பட்டதாகும். மின்தடை குறித்த மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ள அந்தந்த பகுதியின் மின்வாரியங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் அவரது வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்த சம்பவத்தை அடுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில திதனங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே இன்று பிரதோஷத்திற்கு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
Nandhinipriya Ganeshan November 24, 2022
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.கே.நகர் காலனி அமீர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (25). இவருடைய மனைவி கார்த்திகா (23). இந்த தம்பதியினருக்கு கடந்த வருடம் அக்டோபர் 30 ஆம் தேதி சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மூச்சு குழாயில் சுவாசிப்பு பிரச்சனை இருந்ததாக மதுரையில் ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கடந்த வருடம் நவம்பர் 2 ஆம் தேதி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
Gowthami Subramani October 25, 2022
விருதுநகர் மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியை உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் பகுதியில், ஆரவாரம்பட்டி கம்பர் தெருவில் வசித்து வரும் தம்பதியினர் மணிகண்டன் – மாரீஸ்வரி. இவர்களுக்கு பரமேஸ்வரன் என்ற ஐந்து வயதுடைய மகனும், 1 1/3 வயதில், முத்துலட்சுமி என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளனர். நேற்று மாலை நேரத்தில் மாரீஸ்வரி துணிகளைக் காயப் போடுவதற்காக மாடிக்குச் சென்றுள்ளார்.
விருதுநகரில் பவர் கட்...! எப்ப போகும்? எப்ப திரும்பி வரும்?
UDHAYA KUMAR September 25, 2022
விருதுநகர்: நெல்லை நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதியதில் தாய், மகன் உயிரிழந்துள்ளார். விபத்தில் தாய் முத்துலட்சுமி, மகன் மௌலி உயிரிழந்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடந்த தேர்த்திருவிழாவில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புரத்தில் தேர்த்திருவிழா நடந்தது. ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்ட நிலையில், ராஜபாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள குவாலர் தெரு வளைவில் மரத்தில் மோதி தேர் நின்றது.
விருதுநகர் மாவட்டத்தில் ஆட்டோ மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியதில் 10 மாணவ மாணவியர் மற்றும் ஆட்டோ டிரைவர் காயமடைந்தனர். விருதுநகர் அருகே உள்ள துலுக்கன்பட்டி எனும் பகுதியைச் சேர்ந்த 2 மாணவிகள் உட்பட 10 மாணவர்கள் காலை டிரைவர் நாகராஜின் ஆட்டோவில் ஆவுடையாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றனர். பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆவுடையாபுரம் ரெயில்வே கேட் பகுதியில், எதிரே வந்த பட்டாசு ஆலை வேன் மீது எதிர்பாராத விதமாக ருக்கு நேர் மோதியதில் ஆட்டோவின் முன்பகுதி சேதமடைந்தது.