Gowthami Subramani January 25, 2023
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாளான ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், இந்த தேதியானது தேசிய விடுதலை நாளாக இந்திய மக்கள் அனைவராலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளைக் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் டெல்லியில் அனைத்து மாநிலங்களும் பங்குபெற்று அணி வகுப்புகள் நடத்தப்படும். இது, அந்தந்த மாநிலங்களின் பெருமையை எடுத்துக் கூறும் வகையில் அமைகிறது. இந்த சிறப்பான நாளில் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களைப் பகிர்ந்து, தாய் நாட்டுக்கும், அன்னைக்கும் மரியாதை செலுத்துவோம்.
Nandhinipriya Ganeshan January 25, 2023
குடியரசு தினம் நமது நாட்டின் மிக முக்கியமான தேசிய நிகழ்வுகளில் ஒன்று. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலாக்கப்பட்டதை நினைவுக்கூரும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், நாளை நமது நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவிக்க இந்த பதிவில் குடியரசு தின கவிதைகளை பதிவிட்டுள்ளோம், அதை அனைவருக்கும் பகிர்ந்து நமது தேசப்பற்றை வெளிப்படுத்துவோம்.
Vaishnavi Subramani January 21, 2023
தேசிய கட்டிப்பிடித்தல் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 21 அன்று கொண்டாடப்படுகிறது. கட்டிப்பிடிப்பதைக் கொண்டாட ஒரு தினமா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். ஆனால், இது முற்றிலும் உண்மை. கட்டிப்பிடிப்பது என்பது காதலர்கள், கணவன், மனைவி ஆகியோர்களுக்கு மட்டும் பொருந்தாது. நம் மனதிற்குப் பிடித்தவர்களை, அவர்கள் எந்த உறவாக இருந்தாலும் அவர்களை அன்பாகப் பாசமாக அரவணைப்பதும் ஆகும்.
Priyanka Hochumin January 22, 2023
நாம் எதனால் குடியரசு தினம் கொண்டாடுகிறோம் தெரியுமா? சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் வெள்ளையர்களின் அராஜகத்தில் பல கொடுமைகளை மேற்கொண்டனர் நம் இந்தியர்கள். அவர்கள் அனுபவித்த கஷ்டங்களுக்கு பலனாக போராட்டங்களால் நமக்கான சுதந்திரத்தை வென்றனர். 1947 ஆம் ஆண்டு நமக்கு சுதந்திரம் கிடைத்தாலும் நமக்கான அரசியலமைப்பு 1950 இல் தான் உருவாக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
Priyanka Hochumin January 21, 2023
சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் வெள்ளையர்களின் அராஜகத்தில் பல கொடுமைகளை மேற்கொண்டனர் நம் இந்தியர்கள். அவர்கள் அனுபவித்த கஷ்டங்களுக்கு பலனாக போராட்டங்களால் நமக்கான சுதந்திரத்தை வென்றனர். இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் கலந்து கொண்டு நம் நாட்டிருக்காக தங்கள் உயிரை இழந்தனர். 1947 ஆம் ஆண்டு நமக்கு சுதந்திரம் கிடைத்தாலும் நமக்கான அரசியலமைப்பு 1950 இல் தான் உருவாக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
Gowthami Subramani January 11, 2023
தமிழர்களின் திருநாளாகக் கொண்டாடப்படும் தைப் பொங்கல் திருநாள் ஆண்டு தோறும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையில், மக்கள் தங்கள் வீடுகளில் வண்ண கோலங்களிட்டு, இனிப்புகள் செய்து, பண்டிகையை வெகு சிறப்பாகக் கொண்டாடுவர். இதில், முக்கியமான ஒன்று, பொங்கல் பண்டிகையின் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர். இதில், தைப் பொங்கல் திருநாளில் பகிர்ந்து கொள்ளப்படும் வாழ்த்துக்களைக் காண்போம்.
Gowthami Subramani January 11, 2023
தைத் திருநாள், தமிழர்களின் திருநாள் எனக் கொண்டாடப்படும் நன்னாள் ஆகும். பொங்கல் விழாவானது, போகிப் பண்டிகை, சூரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் எனக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், பொங்கல் பண்டிகையின் ஒவ்வொரு நாளுக்கும் நம்முடைய வாழ்த்துக்களைப் பகிர்ந்து, இந்த சிறப்பான பொங்கல் திருவிழாவைக் கொண்டாடுவோம். பொங்கல் விழாவில் உழவர்களின் சிறப்பைப் போற்றும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதில் மாட்டுப் பொங்கல் பண்டிகைக்கான வாழ்த்துக்களைப் பகிர்வோம்.
Priyanka Hochumin January 10, 2023
பொங்கல் பண்டிகை தமிழர்களின் பண்டிகையாகும். இந்த பண்டிகை முற்றிலும் உழவர்களின் கடின உழைப்பிற்காக கொண்டாடப்படுகிறது. மொத்தம் நான்கு நாட்கள் வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடப்படுகிறது. அதில் நான்காம் நாள் கொண்டாடப்படுவது காணும் பொங்கல். இந்த விழாவை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பொங்கல் என்றும் அழைப்பார்கள். இது முற்றிலும் பெண்களுக்கு முக்கியமான விழா என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் பெண்கள் பொங்கப்பானை வைக்கும் போது அதனை பூ, மாங்காய் இல்லை மற்றும் புது மஞ்சள் கொத்தினை சேர்த்து கட்டி பொங்கல் வைப்பார்கள்.
Nandhinipriya Ganeshan January 09, 2023
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை என்றால் அது பொங்கல் திருநாள் தான். முதல் நாள் போகி பொங்கல், இரண்டாம் நாள் தைப் பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல் என நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இந்த பொங்கல் பண்டியானது எப்போதும் மார்கழி கடைசி நாளில் இருந்து கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு முறை பொங்கல் பண்டிகை வரும்போதும் அனைவருக்கும் மனதில் ஒருவிதமான உற்சாகம் பிறக்கும். அதிலும் முதல் நாள் பண்டியகையான போகியன்று, அந்த ஆண்டு முழுக்க அணிந்த உடைகள், பழைய வைக்கோல் போன்றவை எல்லாம் தீயிட்டு எரித்துவிட்டு, புதியவைகளை ஏற்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த அற்புதமான நாளில் பழைய துக்கங்கள், கோபம், வெறுப்பு அனைத்தையும் தீயில் எரித்துவிட்டு, அன்பான குடும்பத்தோடு மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.
Priyanka Hochumin January 09, 2023
தமிழர்கள் விசேஷமாக கொண்டாடும் விழாக்களுள் முக்கியமான திருவிழா தான் பொங்கல். அதில் முதல் நாள் பண்டிகை போகி. இது ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் முக்கிய நோக்கமே "பழையன கழிதலும் புதுவென புகுதலும்" தான். அதாவது வீட்டில் இருக்கும் தேவையில்லாத பொருட்களை வீட்டின் வெளியில் தீ வைத்து எரித்து கெட்டதை நம் வாழ்வில் இருந்து அகற்றவதாக கருதப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு நமக்காக கொடுத்த நல்ல விஷயங்களுக்கு நன்றியையும், அடுத்து வரும் ஆண்டு சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் பட்சத்தில் வரவேற்கவும் உகந்த நாள்.