Nandhinipriya Ganeshan March 16, 2023
இந்தியாவில் எச்3என்2 வைரஸால் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைத் தான் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், 2 பேர் இந்த வைரஸ் தொற்றால் இறந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் இந்த காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படும் இடமாக தமிழகம் முதலில் உள்ளது. அதே சமயம் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் வேகமும் அதிகரித்துள்ளது. இதை தடுக்கவே தமிழ்நாடு அரசு, காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்துவது போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணாக்கர்களுக்கு இந்த ஆண்டு முழு ஆண்டு தேர்வை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் மாதம் 24-ம் தேதி தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை தேர்வு நடைபெற இருந்த நிலையில், ஒரு வாரம் முன்னதாக ஏப்ரல் 17ஆம் தேதியே தேர்வு நடைபெறும் என கல்வி துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில் புதுச்சேரியில் இந்த புதிய வைரஸ் தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு இன்று முதல் மார்ச் 26ம் தேதி வரை 11 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். இந்த நிலையில், சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு இல்லை என விளக்கமளித்துள்ளார்.
Nandhinipriya Ganeshan March 15, 2023
இந்தியாவில் எச்3என்2 வைரஸால் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைத் தான் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், 2 பேர் இந்த வைரஸ் தொற்றால் இறந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் இந்த காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படும் இடமாக தமிழகம் முதலில் உள்ளது. அதே சமயம் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் வேகமும் அதிகரித்துள்ளது. இதை தடுக்கவே தமிழ்நாடு அரசு, காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்துவது போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதித் தேவை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. வைரஸ் காய்ச்சல் பரவல், கோடை வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் தேர்வுகளை முன்னதாக நடந்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அடுத்து ஆண்டு தேர்வை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 17 ஆம் தேதியே தொடங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் முன்கூட்டியே தேர்வுகளை முடித்து, விடுமுறை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Nandhinipriya Ganeshan March 15, 2023
இன்புளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், புதுச்சேரியில் நாளை மார்ச் 16-ஆம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை 10 நாட்களுக்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார். தமிழகத்திலும் இந்த புதிய வகை வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருவதால், தமிழக அரசும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Priyanka Hochumin March 14, 2023
தமிழகத்தில் நேற்று தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளி கல்வித்துறை அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 225 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தமிழ் பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் 1,115 பேரும், 12ம் வகுப்பு மாணவர்கள் 49,559 பேரும் தேர்வு எழுத வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Priyanka Hochumin March 13, 2023
நாளை மார்ச் 14 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை மார்ச் 14 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் விசேஷமான நாளாகும். ஏனெனில் பெண்கள் 41 நாட்கள் விரதமிருந்து இருமுடி கட்டி கோவிலுக்கு வருவது சபரிமலைக்கு செல்வதற்கு இடாகும். ஆகவே, நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.
Nandhinipriya Ganeshan March 10, 2023
திங்கட்கிழமை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால், அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்காக நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். முன்னதாக நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Nandhinipriya Ganeshan March 10, 2023
வருகின்ற திங்கட்கிழமை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது. இதற்காக, தமிழகத்தில் 3185 மையங்களிலும், புதுச்சேரியில் 40 மையங்களிலும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுதேர்வில் மாணவ மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வு அறையில் மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை. பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் பிடிபடும் மாணவர் அல்லது மாணவி தேர்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும். காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றி எழுதுததல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டால் பிடிபடும் மாணவர் அல்லது மாணவி ஓராண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும். ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகங்கள் முயன்றால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். அத்துடன் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வுக் காலங்களில் மாணவர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 9498383081, 9498383075 என்ற எண்ணில் இக்கட்டுப்பாட்டு அறையினை தொடர்புக் கொள்ளலாம். தேர்வுகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக 3100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
Gowthami Subramani March 06, 2023
பாரதியார் பல்கலைக்கழகம் இணையவழிக் கல்வி மூலமாக சில குறிப்பிட்ட பாடப்பிரிவுகளைக் கற்க முடியும் என அறிவித்துள்ளது. பாரதியார் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி முறையில் பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. மேலும், இணைய வழியிலும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கான மாணவர் சேர்க்கையானது இந்த மாதம் 3 ஆம் தேதி முதலே தொடங்கியது.
Gowthami Subramani March 06, 2023
தனியார் பள்ளிகளில் இலவசமாக மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களைப் பற்றி இதில் காண்போம். 2009 ஆம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழகத்தில் இயங்கக் கூடிய சுயநிதி தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் நலிவடைந்த பிரிவினரைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான நிதியை, தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
Nandhinipriya Ganeshan February 23, 2023
தமிழகத்தில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுவருகிறது. மேலும், கல்வி இணை செயல்பாடுகளான நாட்டு நலப்பணி திட்டம், விளையாட்டு மற்றும் உடற்கல்வி திட்டம், சாரணர் இயக்கம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த நிலையில், கல்வி இணை செயல்பாடுகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி, இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இருக்கும் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களை வருகின்ற மார்ச் 4 ஆம் தேதி துறை சார் உயர் அதிகாரிகளால் மண்டல குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இந்த வேலை நாளுக்கு பதிலாக வருகின்ற மார்ச் 13 ஆம் தேதி அன்று விடுமுறை தினமாக மாற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மார்ச் 13 ஆம் தேதி 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுப்பு கிடையாது, அதாவது வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.