Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,117.20
-631.22sensex(-0.87%)
நிஃப்டி21,846.20
-209.50sensex(-0.95%)
USD
81.57

வேளாண் தொழில்நுட்பங்கள்

விளைவித்த பொருள்களை இனி பாதுகாக்கலாம் - குளிர்பதன கிடங்கை பயன்படுத்த இந்த எண்ணை தொடர்புகொள்ளவும்!

Abhinesh A.R June 27, 2023

விவசாயிகள் விளைவித்த பொருள்களை அழிந்துபோகாமல் பாதுகாக்க குளிர்பதன கிடங்கு உதவியாக இருக்கும். அந்தவகையில் குளிர்பதன கிடங்கு தேவைப்படுவோர், அரசு அறிவித்துள்ள இந்த தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.

உங்க வீட்டுலயும் வண்ணமயமான செம்பருத்தி பூக்கள்.. எப்படி வளர்க்கணும்னு பாருங்க..! | Sembaruthi Chedi Valarpathu Eppadi

Gowthami Subramani June 21, 2023

இயற்கையாக சில தாவரங்கள் மருத்துவக் குணங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இன்னும் சில தாவரங்கள் அழகிற்காகவும், பல்வேறு பயன்கள் அளிக்குமாறும் உள்ளன. அந்த வகையிலேயே நம் வீடுகளில் வளர்த்தக் கூடிய செம்பருத்தி செடியும் அடங்கும். தற்போதைய நிலையில், நாம் பெரும்பாலான இடங்களில் செம்பருத்தி செடிகளைக் காண முடிவதில்லை. இதனை நம் வீடுகளில் எளிமையான முறையில் நடவு செய்யலாம். இதில், விதைகளில் இருந்து செம்பருத்தி செடி எப்படி வளர்ப்பது என்பது குறித்துக் காணலாம். செம்பருத்தி செடி பொதுவாக, செம்பருத்தி செடி பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த செடியானது வற்றாத தாவரங்களின் வகையைச் சார்ந்தது. இந்த செடிகள் பல்வேறு அளவுகள், வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் கிடைக்கின்றன. அதன் படி, எந்த வகை செடிகளை மக்கள் விரும்புகின்றனரோ அவற்றையே அலங்கார வீட்டுத் தாவரமாக வளர்க்கலாம். விதையில் இருந்து செம்பருத்தி வளர்ப்பது எப்படி? விதையில் இருந்து செம்பருத்தி செடி வளர்ப்பது சிறிது வேலை எடுத்தாலும், முடிவில் செம்பருத்தி செடி அழகாக வளர்க்கப்படுகிறது. விதையைப் பயன்படுத்தி செம்பருத்தி செடி வளர்ப்பது குறித்துக் காணலாம். செம்பருத்தி செடி வளர்ப்பானது, தாவரத்தின் கடினத்தன்மையைப் பொறுத்து நேரம் எடுத்துக் கொள்ளும். வீட்டிற்குள்ளேயே செடி வளர்ப்பைத் தொடங்கலாம். இந்த கடின விதைகளானது பூக்களில் வட்ட முனையைக் கொண்ட கத்தியைப் பயன்படுத்தி விதைகள் முளைக்க உதவுகிறது. மேலும், இது அதிக ஈரப்பதத்தை நுழைய உதவுகிறது. விதைகளை 1 முதல் 8 மணி நேரம் வரை அறை வெப்பநிலையில் நீரில் ஊறவைக்க வேண்டும். தொட்டி அல்லது பானையில், மண் அல்லது விதை தொடக்க கலவையைத் தேர்வு செய்து எடுத்துக் கொள்ளவும். இந்த தொட்டி கலவையில் கால் அங்குல ஆழத்தில் விதைகளை நடவு செய்து வெயிலில் வைத்து சுமார் 75 முதல் 85 டிகிரி ஃபாரன்ஹீட் வரையில் வைக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து, 2 அல்லது 3 வாரங்களுக்குப் பின், வண்ண மலர்கள் கொண்ட செடி நாற்றுகள் முளைக்கும். இந்த வண்ண மலர்கள் கொண்ட செடியின் அளவு அதிகரிப்பதற்கு ஏற்றவாறு, அவற்றைப் பெரிய தொட்டியில் வைக்க வேண்டும். இவ்வாறு வைத்த செம்பருத்தி செடிகளின் தண்டு முழுமையான தாவரமாக மாறுவதற்கு முன், மெல்லியதாகவும், உடையக் கூடிய தண்டுகளைக் கொண்டுள்ளது. இந்த தண்டு வலுவாக மாறும் வரை வெளியில் நடுவதைத் தவிர்க்க வேண்டும். இதனைத் தொடர்ந்து, வண்ண மலர்களைக் கொண்ட நாற்றுக்களில் இலைகளை வளர்ந்த பிறகு, ஒரு நாளைக்கு சில மணி நேரங்கள் மட்டும் வெளியே எடுத்துச் சென்று தண்டை கடினப்படுத்தலாம். இவ்வாறு தண்டு கடினமான பிறகு, செம்பருத்தி செடியின் வேருக்கு இடமளிக்கும் வகையில் ஒரு குழி தோண்டி, ஒரு அடி ஆழம் வரை மண்ணைத் தளர்த்தி வைத்துக் கொள்ளலாம். அதன் பிறகு, வேரின் மேற்பகுதி மண்ணின் மேற்பரப்புடன் சமமாக இருக்குமாறு துளையின் உள்ளே செடியை அமைக்க வேண்டும். பிறகு துளையை மண்ணால் நிரப்பி விட வேண்டும். இவ்வாறு மண்ணை நிரப்பும் போது செடிக்கு காற்று புகாத வண்ணம் மண்ணை இடக் கூடாது. பிறகு நடவு பகுதியில் ஆழமான நீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறே, விதையில் இருந்து செம்பருத்தி செடி வளர்க்கப்படுகிறது.

வீட்டுலேயே ஈஸியா வெள்ளரிக்காய வளர்க்கலாம்.. அதுக்கு இது மட்டும் பண்ணா போதும்..! | How To Grow Cucumber At Home

Gowthami Subramani June 06, 2023

கோடை காலத்தில், நாம் பெரும்பாலும் தண்ணீர் சார்ந்த காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நன்மை தரும். அந்த வகையில், வெள்ளரிக்காய் தண்ணீர் விடும் காய் ஆகும். வெள்ளரியின் பிறப்பிடம் இந்தியா என்றே கூறப்படுகிறது. வெள்ளரியை நம் வீட்டிலேயே இயற்கையாக வளர வைக்கலாம். மாடித் தோட்ட காய்கறிகளுள் வெள்ளையும் அடங்கும். கோடை காலத்தில் நாம் வெள்ளரியை வளர்ப்பது அவசியமாகக் கருதப்படுகிறது. இந்தப் பதிவில், விதையிலிருந்து வெள்ளரிக்காய் எப்படி வளர வைப்பது என்பதைப் பார்க்கலாம்.

அடேங்கப்பா! அரிசியில இத்தன வகை இருக்கா?.. | Rice Varieties in Tamil

Nandhinipriya Ganeshan May 17, 2023

தென்னிந்திய உணவு வகைகளில் அதிகம் விரும்படும் உணவு என்றால் பார்த்தால் அரிசி வகை உணவாக தான் இருக்கும். அரிசியை கொண்டு தயாரிக்கும் உணவுகள் எத்தனையோ இருக்கின்றன. ஆனால், அரிசி உணவு மட்டுமல்ல அரிசியிலும் ஏராளமான வகைகள் இருக்கின்றன. நம்முடைய பாட்டனார் காலத்தில் இருந்தே பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் இந்த அரிசிகளில் புழுங்கல் மற்றும் பச்சரிசி மட்டுமே தற்போது அதிகமானோர் உண்டு வருகின்றனர். இதை தாண்டி, பிரியாணி செய்வதற்காக 'பாஸ்மதி' என்ற அரிசியை பயன்படுத்துகிறோம். பொதுவாக, அரிசி என்றாலே அது வெள்ளையாக தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது முற்றிலும் தவறு. ஏனென்றால், அரிசியானது நம்முடைய சாப்பாடு தட்டுக்கு வருவதற்கு முன்பு பலவகையில் பட்டைத்தீட்டப்பட்டு வெறும் சக்கையாகத்தான் வருகிறது. இந்த சக்கையை தான் நாம் தினமும் உணவாக சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். இதனால், பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதற்கு முக்கியமான மற்றும் முதன்மையான காரணம். நம்முடைய பாட்டனார் காலத்திலும் அரியை தான் சாப்பிட்டு வாழ்ந்தார்கள். ஆனால், நமக்கு வரும் நோய்கள் எதுவும் அவர்களுக்கு வரவில்லையே. காரணம் அவர்கள் அரிசியின் மேலே இயற்கையாக ஒட்டி வைத்திருக்கும் சத்தையெல்லாம் உதிர்காமல், பட்டை தீட்டாமல் சமைத்து சாப்பிட்டார்கள். அதன்படி, அந்த காலத்தில் 2000க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் இருந்தன. அவற்றில் கறுப்பு கவுனி, அருங்குருவை, மாப்பிள்ளை சம்பா, காட்டுயாணம் அரிசி போன்ற ரகங்கள் அதிக பயன்களை தரக்கூடியவையாக இருந்தன. இந்த அரிசிகள் மட்டுமல்லாமல் பாரம்பரியமான அரிசி வகைகள் (arisi vagaigal) எத்தனையோ இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

வீட்டிலேயே மிக எளிமையான முறையில் ரோஸ்மேரி செடி வளர்ப்பது எப்படி? | How to Grow Rosemary at Home in Tamil

Nandhinipriya Ganeshan March 17, 2023

ரோஸ்மேரி (Rosemary) என்பது வாசனை மிகுந்த பசுமை மாறா மற்றும் ஊசி போன்ற இலைகளை கொண்ட பல ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு மூலிகை தாவரம். இந்த மூலிகை வெளிநாடுகளில் அழகுத் தாவரமாக வளர்க்கப்படுகிறது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இந்த செடியின் சிறிதளவு தண்டை பறித்து தலையணைக்கு அடியில் வைத்து தூங்கியினால் நிம்மதியான தூக்கம் வரும். இந்த தாவரத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் தலைமுடி வளர்ச்சிக்கு ரொம்பவே பயன்படுகிறது. 

வெறும் தண்ணீரில் மணி பிளாண்ட் வளர்ப்பது எப்படி? | How to Grow Money Plant in Water Faster

Nandhinipriya Ganeshan March 17, 2023

நாம் வீட்டில் வளர்ப்பதற்காகவே பல விதமான செடிகள் இருக்கின்றன. அவற்றில் அதிர்ஷ்ட செடியாக இருப்பது மணி பிளாண்ட். இந்த செடியை பெரும்பாலானோர் வீடுகளில் வளர்ப்பதை பார்த்திருப்போம். ஏனென்றால், இந்த செடி வளரும் வீட்டில் அதிர்ஷ்டம் தேடி வருமாம். பொதுவாக, இந்த செடியை மண்ணில் தான் வளர்ப்பார்கள். ஆனால், இதை வெறும் தண்ணீரிலும் வளர்க்கலாம். என்னாங்க சொல்றீங்க தண்ணீரிலா? ஆம், இந்த செடி தண்ணீரிலும் வளரக்கூடியது. சரி வாங்க, தண்ணீரில் வளர்ப்பது என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

மாடித்தோட்டம் டிப்ஸ்: விதையிலிருந்து முலாம் பழம் செடி வளர்ப்பது எப்படி? | How to Grow Muskmelon from Seed in Tamil

Nandhinipriya Ganeshan February 18, 2023

கோடைக்காலம் வந்துவிட்டாலே நாம் முதலில் தேடிவடுவது நீர்ச்சத்து அதிகமாக உள்ள பழங்களை தாங்க. அதிலும் தர்பூசணிக்கு அடுத்து கோடைக்காலங்களில் அதிகம் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று முலாம் பழம். இதை கிர்ணி பழம் என்று சொல்வார்கள். இந்த பழத்தில் 60% நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த பழத்தை நம் வீட்டிலேயே எளிமையான முறையில் வளர்க்க முடியும். இதற்காக, அதிக நாட்களும் தேவையில்லை. சரி வாங்க நீர்ச்சத்து நிறைந்த முலாம் பழம் செடியை விதையிலிருந்து வளர்ப்பது எப்பது என்று விரிவாக பார்க்கலாம். முலாம் பழம் ஒரு கொடி வகையை சேர்ந்த ஒரு தாவரம். மற்ற கொடிவகை தாவரங்களுக்கு பந்தல் அமைக்க வேண்டியது அவசியம். ஆனால், இந்த முலாம் பழம் கொடியை வளர்க்க பந்தல் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. வெறும் மூன்றே மாதத்தில் [45 - 90 நாட்கள்] அறுவடைக்கு வரக்கூடிய பழம். எனவே, கோடைக்காலம் வருவதற்கு ஒரு 3-4 மாதங்களுக்கு முன்பாகவே விதையை விதைத்துவிட வேண்டும்.

வீட்டிலேயே தர்பூசணி வளர்க்கணுமா.? இப்படி பண்ணுங்க..!| How to Grow Watermelon at Home

Gowthami Subramani February 02, 2023

தர்பூசணி அனைவராலும் விரும்பப்படும் உணவுப் பொருள்களில் ஒன்றாகும். இந்தியாவில், இதன் உற்பத்தி சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னதாகவே துவங்கியது. வெயில் காலங்களில் தர்பூசணி பழம் அனைவருக்கும் மிகவும் பிடித்தவையாகவும், உடல் உஷ்ணத்தைக் குறைக்கக் கூடியவையாகவும் இருக்கும். வெயில் காலம் வந்து விட்டாலே, தர்பூசணிக்கு மக்கள் தேடி அலைவர். வாட்டி வதக்கும் வெயிலில், தர்பூசணி சாப்பிட வெளியே எங்கும் செல்ல வேண்டும். வீட்டிலேயே தர்பூசணியை எப்படி வளர்க்கலாம் என்பதைப் பற்றி இதில் காணலாம்.

மாட்டுப் பொங்கலின் சிறப்பு என்ன? எப்படி கொண்டாட வேண்டும்? | How to Celebrate Mattu Pongal 2023

Nandhinipriya Ganeshan January 06, 2023

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையானது விவசாயிகளுக்கு பக்கபலமாக நின்ற கால்நடைகளையும், உழவு பொருட்களையும் அலங்கரித்து வழிபடுவது தமிழர்களின் பாரம்பரிய மரபாக இருந்து வருகிறது. இதனை 'பட்டிப் பொங்கல்', 'கன்று பொங்கல்' என்று என்று வட்டார வழக்கத்துக்கு ஏற்ப மக்கள் அழைப்பதுண்டு. ஆண்டு முழுவதும் விவசாயத்துக்கு பேருதவியாக இருக்கும் காளையும், அவற்றின் உழைப்பையும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பெருநாள், இந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

எந்த மாதத்தில் என்ன பயிரிடலாம்? | Vegetable Growing Season Chart in Tamil Nadu

Nandhinipriya Ganeshan December 26, 2022

பருவநிலைக்கு ஏற்ப பயிர் செய்வதையே அக்காலத்தில் பட்டங்களாக பிரித்து வைத்திருந்தனர். பருவநிலைக்கு ஏற்ப பயிர் செய்தால் மட்டுமே பயிரின் விளைச்சலும் செழிப்பாக இருக்கும். உதாரணமாக், ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்களும், காய்கறி பயிர்களும் சாகுபடி செய்வார்கள். தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி செய்யாமல், மாற்றுப் பயிர்களுக்கு பழைய பயிரின் கழிவுகள் உரமாக பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகள் அதிகம் புதுப்பயிரை தாக்குவது கிடையாது. இப்படி, விவசாயத்தில் கைதேர்ந்தவர்களுக்கு என்ன பயிர் விதைக்க வேண்டும், அதை எப்போது அறுவடை செய்ய வேண்டும் என்று தெரியும். ஆனால், புதிதாக விவசாயம் செய்ய தொடங்கும் நபர்களுக்கு அந்த அளவிற்கு அனுபவம் இருக்காது அல்லவா? அந்த பிரச்சனையை போக்கவே இந்த பதிவு. இதில் 12 மாதங்களில் எந்த மாதிரியான பயிர்களை பயிர் செய்யலாம், அதை எத்தனை நாட்களில் அறுவடை செய்யலாம் என்பது பற்றிய முழுவிபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.