Priyanka Hochumin May 30, 2023
ஐபிஎல் 2023 தொடரின் இறுதி போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்து. மழை நிற்காமல் இருந்ததால் போட்டி சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. CSK தங்களுக்கு கொடுத்த 15 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்து இலக்கை அடைந்தனர். ஐபிஎல் 2023 தொடரின் சாம்பியன்ஷிப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியது.
Nandhinipriya Ganeshan May 10, 2023
கடந்த 2020 ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த சிஎஸ்கே அணி கேப்டன் தோனி தற்போது ஐபிஎல் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறார். அந்தவகையில், தற்போது ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இந்தியா முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த சீசனோடு தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக சொல்லப்படுகிறது. இதனால், சிஎஸ்கே அணி இந்தியாவில் எந்த ஸ்டேடியத்தில் விளையாடினாலும் மகேந்திர சிங் தோனியை நேரில் காண்பதற்காக ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின. அப்போது, மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களில் ஒருவர் தோனி போன்றே இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது. ஏனென்றால், அந்த நபர் தோனி வயதான தோற்றத்தில் எப்படி இருப்பாரோ அப்படியே அச்சசலாக இருக்கிறார். இன்னும் 15 ஆண்டுகள் கழித்து தோனி எப்படி இருப்பாரோ அப்படியே இருப்பதால் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Priyanka Hochumin May 07, 2023
குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) கேப்டன் ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே அணி பற்றி பிரமித்து கூறிய விஷயம் என்ன தெரியுமா? மற்றொரு வழி இருக்கிறது என்பதை நான் CSK அணியிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அதாவது அணியில் கை தேர்ந்த வீரர்கள் இல்லாவிட்டாலும் அவர்களிடம் இருக்கும் சிறப்புகளை கண்டறிந்து சிறந்த சூழலை அமைப்பதன் மூலம் வெற்றி பெற முடியும் என்னும் விஷயம் மிகவும் என்னை பிரம்மிக்க வைத்தது.
Priyanka Hochumin May 05, 2023
கடந்த மே 1 ஆம் தேதி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் RCB vs LSG-க்கு இடையே போட்டி நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. போட்டி முடிந்த பின்னர் இரண்டு அணி வீரர்களும் கை குலுக்கி விடைபெறும் போது எதிர்பாராத விதமாக விராட் கோலி மற்றும் கவுதம் கம்பிர் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. எதனால் இந்த பிரச்சனை எழுந்தது என்று பலரும் குழம்பி போயினர்.
Priyanka Hochumin April 05, 2023
நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் 2023 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சுமார் 1.5 கோடி ஏலத்தில் பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹசன் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால் அவர் தற்போது தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டி தொடரில் இருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணி வீரர் ஜேசன் ராயை 2.8 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளதாக நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Nandhinipriya Ganeshan April 04, 2023
16 ஆவது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 6 ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே களமிறங்கினர். தொடர்ந்து அதிரடி காட்டிய கெய்க்வாட் 31 பந்துகளில் 57 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கான்வே 47 ரன்களுக்கும் அடுத்து வந்த துபே 27 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து இறுதி ஓவரின் இரண்டாம் பந்தில் களமிறங்கிய தோனி முதல் இரண்டு பந்துகளுக்கும் சிக்ஸர்களை அடித்து தள்ளினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த வீரர் என்ற பாராட்டை பெற்றார். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்கள் இழப்பிற்கு 205 ரன்களை எடுத்து தோல்வியுற்றது. இந்த நிலையில், போட்டியின் போது லக்னோ அணிக்கு எதிராக சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் மொத்தமாகவே 13 ஒய்டுகளையும், 3 நோ பால்களையும் வீசியுள்ளனர். இது ரசிகர்கள் மற்றும் பயிற்சிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு தோனி இது குறித்து பேசுகையில், "சென்னை அணியினர் வேகப்பந்து வீச்சில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. எதிரணியின் வீரர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். அவர்கள் என்ன யுத்திகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதனை நீங்களும் செயல்படுத்த முயற்சி செய்யுங்கள். அதேபோல் இன்றைய ஆட்டத்திலும் நாம் கூடுதலாக நோபால் மற்றும் ஒய்டுகளை வீசினோம். இது நிச்சயம் சரியான விஷயம் கிடையாது. நோ பால்களை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால், சிஎஸ்கே அணி வீரர்கள் புதிய கேப்டன் கீழே விளையாட நேரிடும்" எனக் கூறினார்.
Priyanka Hochumin April 04, 2023
ஐபிஎல் 2023 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 1.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் சகீப் அல் ஹஸன். ஆனால் தற்போது தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவதாக கூறியுள்ளார். IPL தொடரின் விதிமுறைப்படி ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் தொடர் முடியும் வரை வெளியேறுவதற்கு அனுமதி இல்லை. ஆனால் இவரின் திடீர் அறிவிப்பிற்கு பின்னர் நிஜமாகவே அவர் தொடரில் இருந்து வெளியேறிவிட்டாரா அல்லது இவருக்கு பதில் மற்றொரு வீரரை KKR களமிறக்குமா உள்ளிட்ட விவரங்கள் இன்னும் வெளியாக வில்லை.
Priyanka Hochumin March 28, 2023
தமிழக ரசிகர்களுக்கு தல தோனி அவர்கள் தந்த அற்புதமான பரிசு என்ன தெரியுமா? இது தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக். இந்தியர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் 2023 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31, 2023 அன்று தொடங்க உள்ளது. தல தோனி தமிழக ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இருக்கையில் மஞ்சள் நிற பெயிண்ட் பூசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது ரசிகர்களை மிகவும் ஊக்குவிக்கின்றது என்று பலரும் கூறி வருகின்றனர்.
Priyanka Hochumin February 20, 2023
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் எம்.எஸ் டோனி அவர்களின் கடைசி ஐபிஎல் போட்டி குறித்த செய்தியை அதிகாரபூர்வமாக அறிவித்தது சி.எஸ்.கே நிறுவனம். வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதி முதல் 16 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இது தோனியின் இறுதி போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தன் மீது சென்னை ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பிற்கு மரியாதை செலுத்தும் வகையில் என்னுடைய இறுதி ஆட்டத்தை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி விட்டு தான் ஓய்வு பெரும் முடிவை அறிவிப்பேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இலங்கை கேப்டன் தசுன் ஷனகா தற்போது டி20 போட்டிகளில் மிகவும் அபாரமான ஃபார்மில் உள்ளார். அவர் கடைசியாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார் மற்றும் இரண்டாவது போட்டியில் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் ஏலம் இன்று நடந்தால், அதில் ஷனகாவின் வாய்ப்புகள் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.