இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 100.42 புள்ளிகள் சரிந்து 53,134.35 புள்ளிகளாக இன்றைய வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 24.50 புள்ளிகள் சரிந்து 15,810.85 புள்ளிகளாக நிறைவடைந்துள்ளது. பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில், அடுத்தடுத்து சரிவை கண்டதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் 41 காசுகள் சரிந்து 79.36 காசுகளாக வரலாறு காணாத நிலையில் முடிவடைந்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…