இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 255.39 புள்ளிகள் சரிந்து 55,816.84 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 70.35 புள்ளிகள் சரிந்து 16,649.10 புள்ளிகளாக வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் சற்று கலக்கமடைந்துள்ளனர்.
இதனைதொடர்ந்து இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து 79.85 காசுகளாக வர்த்தகமாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…