சமீபத்தில் பெயத கனமழையால் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேவுள்ள பந்தாரஹள்ளி ஏரியானது முற்றிலும் நிரம்பியுள்ளது. இதனால் ஏரிக்குத் தாழ்வான பகுதியான சவுளுப்பட்டி கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் புகுந்ததால், நெல், அவரை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின. எனவே மீண்டும் விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகாத வகையில் ஏரியின் கரைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும், மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கக்கோரியும் ஏராளமான விவசாயிகள் இன்று அழுகிய நெற்பயிர்களுடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
மழையால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு தருமபுரி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…