தர்மபுரி மாவட்டத்தில் அரசு பேருந்து ஒன்றின் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் காயம் அடைந்தனர்.
மகுடஞ்சாவடியில் இருந்து அரூர் நோக்கி, அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இதில் காளிப்பேட்டை அரசு பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.
இந்நிலையில் சேலம் – அரூர் நெடுஞ்சாலையில் தண்ணீர்தொட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்ற சமயத்தில், சேலத்தில் இருந்து அரூர் நோக்கி அதிவேகமாக தனியார் பேருந்து ஒன்று சென்றது. இதில் வேகமாக வந்த தனியார் பேருந்து, நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீதி மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதனால், அரசு பேருந்தின் பின்புறபகுதியில் பயங்கரமாக மோதியது.
இதனால், அரசு பேருந்தில் பயணித்த பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் காயம் அடைந்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…