Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு - திருப்பூரில் பொதுமக்கள் நூதனப் போராட்டம்

Saraswathi Updated:
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு - திருப்பூரில் பொதுமக்கள் நூதனப் போராட்டம்Representative Image.

திருப்பூரில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி நுதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 45வது வார்டு காயிதே மில்லத் நகர் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி தொடங்கியது முதல் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் அப்பகுதியில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம், இது தொடர்பான எதிர்ப்பை ஏற்கனவே பொதுமக்கள் பதிவு செய்தனர். இருப்பினும் மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று 45 வது வார்டு பகுதி முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்