இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் குறியீடு 303.38 புள்ளிகள் உயர்ந்து 54,481.84 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி குறியீடு 89.65 புள்ளிகள் உயர்ந்து 16,222.55 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்றைய நாளில், எல் அண்ட் டி பங்குகள் 4.72 சதவீதமும், பவர் கிரிட் பங்குகள் 2.94 சதவீதமும் உயர்ந்துள்ளது. இண்டஸ்இந்த் பங்குகள் 1.47 சதவீதமும், டாடா ஸ்டீல் பங்குகள் 1.62 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளது.
இதனைதொடர்ந்து, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் சரிந்து 79.26 காசுகளாக உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…