இன்றைய தினம் பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறவடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 306.01 புள்ளிகள் சரிந்து 55,766.22 புள்ளிகளில் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 88.45 புள்ளிகள் சரிந்து 16,631 புள்ளிகளாக வர்த்தகமாகியுள்ளது. வாரத்தின் முதல் நாளிலையே பங்குச்சந்தைகள் சரிவைக் கண்டதால் முதலீட்டாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
இதனைதொடர்ந்து, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 பைசா உயர்ந்து 79.74 காசுகளாக உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…