Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோவைக்கு விரைவில் மெட்ரோ - தீவிர ஆலோசனையில் நிர்வாகம்!

Abhinesh A.R Updated:
கோவைக்கு விரைவில் மெட்ரோ - தீவிர ஆலோசனையில் நிர்வாகம்!Representative Image.

கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னையிலிருந்து கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக் ஆகியோர் தலைமையில் இந்த கூட்டமானது நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை  மாநகராட்சி ஆணையர் பிரதாப் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பின்னர் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த நிதி  ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கபட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும், கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது எனவும் வரும் ஜூலை15ஆம் தேதி திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் வழங்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

கோவை அவினாசி சாலை, சக்தி சாலை என இரு சாலைகளில் முதற்கட்டமாக திட்டம் செயல்படுத்த படுகின்றது எனவும்,

மொத்தம் 39 கி.மீ தூரம்,  32 நிலையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன எனவும் தெரிவித்தார். அவினாசி சாலையில் 17 ரயில் நிலையங்கள், சக்தி சாலையில் 14 ரயில் நிலைங்கள் அமைய இருக்கின்றது எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த பாதையில்  3 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டு இருக்கின்றது எனவும் தெரிவித்தார். திட்ட அறிக்கையை அரசிடம் கொடுத்த பின்னர், ஒன்றிய அரசின் ஒப்புதல், பன்னாட்டு நிறுவன நிதி பெற்று இந்த திட்டம் செயல்படுத்த பட இருக்கின்றது எனவும் கூறினார்.

கோவை அவினாசி சாலையில் பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், பாலத்தின் இடதுபுறத்தில்  மெட்ரோ ரயில் பாதைக்கான பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும்,  முதல்கட்டமாக இரு பாதைகளும் உயர்மட்ட பாலமாக செயல் படுத்தபடுகின்றது எனவும் தெரிவித்தார். நீலாம்பூரில் இருந்து உக்கடம் வரை அவினாசி சாலையிலும், காந்திபுரத்தில் இருந்து வளையம்பாளையம் வரை சத்தியமங்கலம்  சாலையிலும் அமைக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

மெட்ரோ பணிகள் தொடங்கியதில் இருந்து 3.5 ஆண்டுகளில் பணிகளை முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் மூன்று பெட்டிகள் இருக்கும் நிலையில் ஒவ்வொரு பெட்டியிலும்  250 பேர் பயணிக்க முடியும். மெட்ரோ ரயில் திட்டம் 150 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும் எனவும், அடுத்த 30 ஆண்டுகளுக்கு பயன்பாட்டை அடிப்படையாக

கொண்டு திட்டமிட்டு இருப்பதாகவும், திட்டம் முழுவதும் உயர்மட்ட பாலமாகவே திட்டமிடப்பட்டுள்ளது எனவும், சுரங்க பாதைகள் எதுவும்  திட்டமிடப்பட வில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் ஒரு சில இடங்களில் இதற்காக நில கையகப்படுத்தல் இருக்கும் என்றார். இந்த திட்டத்திற்காக சுமார் 75 ஏக்கர் வரை அரசு மற்றும் தனியார்  நிலம் கையகப்படுத்தப்பட இருக்கின்றது எனவும் சென்னை மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்தார். இதனைதொடர்ந்து டவுன்ஹால் பகுதியில் அலுவலர்கள் சித்திக், ரமேஷ் சந்த் மீனா ஆகியோர் மெட்ரோ ரயில் திட்டம் அமைய இருக்கும் இடங்களை நேரில் ஆய்வு செய்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்