கோவையில் தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமாரின் உடல், அவரது சொந்த ஊரான தேனியில் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
கோவை சரக டிஐஜியாக பணியாற்றிவந்த விஜயகுமார், இன்று காலை தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த விஜயகுமாரின் உடலுக்கு ஏடிஜிபி சங்கர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து, டிஐஜி விஜயகுமாரின் உடல், ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான தேனிக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதையடுத்து, மாலையில் அவரது உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தற்கொலை செய்துகொண்ட டிஐஜி விஜயகுமாரின் உடலுக்கு தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள், உறவினர்கள் என பலரும் டிஐஜி விஜயகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்கள் காவல்துறை மரியாதையுடன் தேனி பழைய பள்ளிவாசல் தெரு பகுதியில் உள்ள மயானத்தில் டிஐஜி விஜயகுமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…