கோவை அருகே நரசிம்ம நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த மாணவர் லண்டனில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் நரசிம்ம நாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள சென்ட்ரல் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் ஜீவநாத். இவர் கடந்தாண்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு படிப்புக்காக சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை ஜீவநாத் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் கால்வாயில் சடலமாக மீட்க பட்டுள்ளார். இந்த தகவல் ஜீவநாத் பெற்றோர்களுக்கு தெரியவந்ததை அடுத்து சம்பவத்தை கேள்விபட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் ஜீவநாத் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து இன்னும் முறையான தகவல் லண்டன் போலீசார் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் மாணவர் ஜீவ்நாத் குளிக்க சென்ற போது விபத்து நேரிட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என எந்த தகவலும் முறையாக வரவில்லை என அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தற்போது பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…