Fri ,May 17, 2024

சென்செக்ஸ் 73,663.72
676.69sensex(0.93%)
நிஃப்டி22,403.85
203.30sensex(0.92%)
USD
81.57
Exclusive

மர்மம் நிறைந்த நிலவின் தென் துருவம்.. | Moon South Pole Mystery

Nandhinipriya Ganeshan Updated:
மர்மம் நிறைந்த நிலவின் தென் துருவம்.. | Moon South Pole MysteryRepresentative Image.

பூமியின் துணைக்கோளான நிலா இரவில் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்தாலும், அது தனக்குள் பல்வேறு மர்மங்களை உள்ளடக்கியது. இதுவரை எத்தனையோ நாடுகள் நிலாவில் ஆராய்ச்சி செய்தாலும், நிலவின் தென் துருவ பகுதியில் மட்டும் எந்தவொரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை. 

இதற்கு காரணம் பல மில்லியன் ஆண்டுகளாக நிலவின் தென் துருவ பகுதியில் சூரிய வெளிச்சமே பட்டதில்லை. ஆனால், இயற்கையில் ஏற்பட்ட மாற்றம் நிலவின் சுற்றுப்பாதையில் 5 டிகிரி மாற்றம் ஏற்பட வைத்தது. நிலவு லேசாக சாய்ந்து. இதனால், நிலவின் தென் துருவத்தில் சில இடங்களில் சூரிய வெளிச்சம் பட்டது. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட இந்த சிறிய மாற்றம்தான் நிலவின் தென் பகுதியில், அடியாழத்தில் இருந்த ஐஸ் கட்டிகள் சில உருகி அங்கு தண்ணீரை உருவாக்கியது. 

இங்குள்ள பள்ளங்களில் உறைந்தநிலையில் 80 மில்லியன் டன் அளவுக்கு தண்ணீர் இருப்பதுடன், நமது சூரிய குடும்பம் உருவான போது ஏற்பட்ட மோதல் காரணமாக நிலவின் தென் துருவத்தில் நிறைய காந்தமும் இருக்கிறது. ஆனால் இது வெளிப்படையாக வெளியே இல்லாமல் காந்த குவியல்களாக நிலவின் அடியில் தென் துருவத்தில் உள்ளது. நிலவின் வட துருவத்தில் இந்த காந்தம் காணப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுமட்டுமல்லாமல், அதிக அளவு ஹைட்ரஜன், மீத்தேன், அமோனியா உள்ளிட்ட மூலக்கூறுகள் மற்றும் நிலவு உருவான நேரத்தில் அதில் படிந்த பொருட்கள் எல்லாம் இந்த தென் துருவத்தில் தான் இருக்கின்றன. இந்த பொருட்களை ஆராய்ந்தால் உலகம் தோன்றியது எப்படி, மனித இனம் தோன்றியது எப்படி என்று பல கேள்விகளுக்கு கூட பதில் கிடைக்கும் என்கிறார்கள். இப்போது பூமியில் தண்ணீருக்கு அடுத்தபடியாக எரிபொருள் தேவைதான் உலக நாடுகளுக்கு முக்கிய தேவையாக இருக்கிறது. எனவே, கதிர்வீச்சு அபாயமில்லாத அதிக ஆற்றல் கொண்ட ஹீலியம் மூலக்கூறுகளை பூமிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன் காரணமாகவே, சீனா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் நிலவின் தென் துருவத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன. இந்த சூழலில்தான் தென் துருவத்தில் சந்திராயன் - 3 விண்கலத்தை தரையிறக்கி பெரும் சாதனை படைத்துள்ளது இந்தியா. இந்த ஆராய்ச்சியின் மூலம் நிலவை பற்றிய பல அரிய ரகசியங்கள் வெளியுலகுக்கு இந்தியா மூலம் தெரியவரும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்