சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கு திட்டத்தை தமிழக அரசு வரும செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக முதல்வர் முக ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு திட்டத்தை விரைந்து செயல்படுத்த உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் முகாம்கள் மற்றும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்கள் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான விண்ணப்பங்களையும் வெளியிட்டனர்.
மேலும் விண்ணப்பங்களை வீட்டிற்கே வந்து வழங்கியும் விவரங்களை பெற அதிகாரிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தன்னார்வலர்களை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற கைரேகை விரல் பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து ரேஷன் கடைகளில் உள்ள கைரேகை பதிவு இயந்திரங்களை புதுப்பிக்கவும், வரும் 17ஆம் தேதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கைரைகை பதிவு இயந்திரம் இருப்பதை உறுதி செய்யவும் அரசு அறிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…