தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பணிபுரியும் தனது முதல் கிளையை வடக்கு கேரளா பகுதியில் கோழிக்கோட்டில் திறந்துள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தின் வணிக மையமான செரூட்டி சாலையில் அமைந்துள்ள இந்த கிளையில் 4 பெண் பணியாளர்கள் இருப்பர்.
நேற்று நடைபெற்ற இதற்கான விழாவில் கலந்து கொண்டு மாநகராட்சி மேயர் பீனா பிலிப் கிளையை திறந்து வைத்தார்.
ஹெச்டிஎஃப்சி வங்கி பாலின பன்முகத்தன்மையை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி, நிறுவனத்திற்குள் பன்முகத்தன்மையதாக ஹெச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.
மார்ச் 31, 2022 நிலவரப்படி, ஹெச்டிஎஃப்சி வங்கியில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 21.7 சதவீதமாக உள்ளது. மேலும் 2025-க்குள் அதை 25 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…