சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது தான் அனைவருடைய கனவாகவும் இருக்கிறது. ஏனென்றால், சொந்த வீடு இருந்தால் மட்டும் இந்த சமுதாயத்தில் நமக்கு அந்தஸ்து கிடைக்கிறது என்பதோடு மட்டுமல்லாமல், திருமண வயதில் இருப்போருக்கு வாழ்க்கை துணையும் கிடைக்கிறது. மேலும், வாடகை வீட்டில் இருக்கும் போது வீட்டு வாடகை, தண்ணீர், கரண்ட் என்று தனி தனியாக பணம் செலுத்த வேண்டியது இருக்கும். இதுக்கே தனியா சம்பாதிக்க வேண்டும். இதற்காகவே நம்மில் பலரும் சொந்த வீடு கட்டிவிட வேண்டும் என்று நினைப்பார்கள்.
ஆனால் இப்போது இருக்கும் விலைவாசி ஏற்றத்தால் மனை வாங்கவே கடினமாக இருக்கிறது, இது தவிர கட்டுமான பொருட்கள், கூலி என்று நிறைய இருக்கிறது. அதனால் நாம் சேமித்து வைத்திருக்கும் பணத்தை வைத்து வீடு கட்ட நினைப்பது முடியாத காரியம். இதற்காகவே இருக்கிறது வீட்டுக் கடன் (Home Loan). இந்த காலக்கட்டத்தில் மிகவும் சுலபமாக நமக்கு வீட்டுக் கடன் கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள பல வங்கிகள் வீட்டுக்கடன்களை வழங்குகின்றன. ஆனால், அதிக கடன் வட்டி விகிதங்கள் காரணமாக பலருக்கும் லோன் வாங்குவது கடினமாக இருக்கிறது.
இந்த சமயத்திலும் சில வங்கிகள் குறைவான வட்டியில் வீட்டு கடன் வழங்குகின்றன. அந்த வங்கிகளின் பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
வங்கி பெயர் (Bank) |
வட்டி விகிதம் (Interest) |
சென்ட்ரல் வங்கி | 8.55% |
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா | 8.6% |
பஞ்சாப் நேஷனல் வங்கி | 8.5% |
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா | 8.6% |
கோடக் மஹிந்திரா வங்கி | 8.65% |
ஆக்ஸிஸ் வங்கி | 8.75% |
எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் | 8.6% |
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி | 8.6% |
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…