கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ரோஷன் (வயது 18) என்பவர் தனது நான்கு நண்பர்களுடன் நேற்று சிறுவாணி பகுதியில் உள்ள தனியார் கிளப் ஒன்றில் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார். பின்னர், இரவு அங்கேயே தங்கிவிட்டு இன்று அதிகாலை வடவள்ளியில் உள்ள தனது வீட்டிற்கு நண்பர்களுடன் ரோஷன் தனது காரில் சென்றுள்ளார்.
கோவையை அடுத்துள்ள பொலுவாம்பட்டி-தொண்டாமுத்தூர் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாடை இழந்து சாலையோரத்தில் இருந்த 120 அடி ஆளமுள்ள கிணற்றில் இரும்பு தடுப்பு சுவரை உடைத்து கொண்டு பாய்ந்தது.
அதில் 75 சதவீதம் தண்ணீர். கார் கிணற்றில் விழுந்து மூழ்கத் தொடங்கியது. இதில் காரை ஓட்டி வந்த ரோஷன் என்பவர் மட்டும் காரின் கதவை திறந்து கிணற்றில் இருந்து வெளியே வந்துவிட்டார். ஆனால், மற்ற மூவரும் ஆதர்ஷ்(18), ரவி(18), நந்தனன் (18) காருடன் கிணற்றில் மூழ்கினர்.
அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் தொண்டாமுத்தூர் போலீசாருக்கும், தொண்டாமுத்தூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கியுள்ள மூன்று பேரை கிரைன் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு ரவி என்ற இளைஞர் மீட்ட தீயணைப்பு வீரர்கள் மீதமுள்ள இருவரது உடல்களையும் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். காலை 6 மணிக்கு நிகழ்ந்த சம்பவம் என்பதால் நீரில் மூழ்கியுள்ள இருவர் உயிரோடு இருக்க வாய்ப்புகள் குறைவு என மீட்பு படை வீரர்கள் கூறியதாக தெரிகிறது.
kovai accident news today, today kovai accident news in tamil, coimbatore news today in tamil
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…