கோவையில் ஒரே மகன் விபத்தில் இறந்த துக்கம் தாளாமல் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் கணுவாய் ரோட்டில் வசித்து வந்த சஞ்சீவ் சங்கர் (வயது 46) மற்றும் அவரது மனைவி நந்தினியின் (45) ஒரே மகன் ரவி கிருஷ்ணா (22). கல்லூரி மாணவரான ரவி கிருஷ்ணா தனது நண்பர்களுடன் பேரூர் அருகே உள்ள ரிசார்ட்டுக்கு சென்று ஓணம் பண்டிகை கொண்டாடியுள்ளார்.
பின்னர் மறுநாள் காலையில் அங்கிருந்து தனது நண்பர்களுடன் ஒரு காரில் வீட்டிற்கு திரும்பியபோது எதிர்பாராத விதமாக்க தென்னமநல்லூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் ரவி கிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேர் இறந்தனர்.
தங்களுடைய ஒரே மகன் விபத்தில் இறந்துவிட்டதால் தொடர்ந்து துக்கத்தில் இருந்து வந்த சஞ்சீவ் சங்கர்- நந்தினி தம்பதியினர், வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்ய முடிவெடுத்தனர். இதையடுத்து பூச்சி மருந்தை வாங்கி இருவரும் குடித்த நிலையில், சிறிது நேரத்தில் வாயில் நுரைதள்ளி மயங்கினர்.
இதற்கிடையே நந்தினியின் அண்ணன் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது நீண்ட நேரமாக போனை எடுக்காததால் சந்தேகமடைந்து அங்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தனது தங்கை மற்றும் அவரது கணவர் விஷம் குடித்து மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இருவரையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு 2 பேரையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…