கோவையில் ஆடு காணாமல் போன நிலையில், அதற்கு நீதான் காரணம் என கூறியதால் ஆத்திரமடைந்த நபர் நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பகுதியைச் சேர்ந்த சின்னசாமி (58) என்பவர் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அவரது 2 ஆடுகள் வழிமாறி சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. எங்கு தேடியும் ஆடுகள் கிடைக்காததால் சின்னச்சாமி மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு சின்னசாமி, அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (28) என்பவருடன் ஒன்றாக மது அருந்தி உள்ளார். அப்போது போதையில் ஆடுகள் காணாமல் போனதற்கு நீதான் காரணம் என ரஞ்சித் மீது சின்னச்சாமி பழி சுமத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட அய்யசாமி என்பவர் இருவரையும் சமரசம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
எனினும் ஆத்திரம் குறையாத ரஞ்சித், வீட்டில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து சின்னசாமியை சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சின்னச்சாமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, ரஞ்சித்தை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…