நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த இசக்கிலெட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேஷ் என்பவருக்கும் பெற்றோர்களால் செப்டம்பர் 1 ஆம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் திருமணத்திற்கு முந்தைய நாள் அதே பகுதியை சேர்ந்த ராம் குமார் என்பவருடன் இசக்கிலெட்சுமி மாயமானார்.
ஆனால் செப்டம்பர் 6 ஆம் தேதி இசக்கிலெட்சுமி கடையம் அருகே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போது வெளியான தகவல் என்னவென்றால், வெங்கடேஷின் சகோதரர் ஆனந்த் மற்றும் அவரின் உறவினர் சிவா இருவரும் தான் இந்த கொலையை செய்ததாக தெரியவந்துள்ளது. அவர்கள் அளித்த வாக்கு மூலம் படி, தன்னுடைய அண்ணனை திருமணம் செய்து கொள்ளாமல் அவமானப்படுத்தியதால் இந்த கொலையை செய்ததாக தெரியவந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…