தூத்துக்குடி வி எம் எஸ் நகரை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 15 ஆம் தேதி சின்ன கன்னுபுரம் பகுதியில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கும்போது காரில் வந்த மர்ம நபர்கள் தனியாக மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து பால்ராஜ் சிப்காட் காவல் நிலைய போலீசில் புகார் அளித்தார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காரில் வந்து ஆட்டை திருடிய தூத்துக்குடி குறிஞ்சிநகரைச் சேர்ந்த சரவணன் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த மணிகண்டன் தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்த ராமர் ஆகிய மூன்று பேரை கைது செய்து ஆடு திருட்டுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…