Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

நெல்லையில் பட்டா வழங்ககோரி சாலை மறியல்.. போக்குவரத்து பாதிப்பு.. 40 பேர் கைது!!

Baskaran Updated:
நெல்லையில் பட்டா வழங்ககோரி சாலை மறியல்.. போக்குவரத்து பாதிப்பு.. 40 பேர் கைது!!Representative Image.

திருநெல்வேலி: குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கக்கோரி பாளை-திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்ட 40-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மனக்கவலம் பிள்ளை நகரில் சுமார் 30ஆண்டுகளுக்கும் மேலாக  மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இங்கு உள்ள வீடுகளுக்கு பத்திரப்பதிவு செய்து பட்டா வழங்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். இது தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். 

ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என கூறி, அவர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 7ஆவது வார்டு கவுன்சிலர் இந்திரா மற்றும் 7ஆவது வார்டு திமுக நிர்வாகி சுண்ணாம்பு மணி ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்கள் 60-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பாளை-திருச்செந்தூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்த  உதவி கமிஷனர் சரவணகுமார், இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்