கணித பாடத்தில் தோல்வியடைந்ததால் விரக்தியடைந்த 10 ஆம் வகுப்பு மாணவி பள்ளியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பாலாஜிநகர் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள சரஸ்வதி மெட்ரிக்குளேஷன் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த இரண்டு மாதங்களாக சரியாக படிப்பில் கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த தேர்வில் கணித பாடத்தில் அவர் தோல்வியடைந்ததாகத் தெரிகிறது. இதனால் அவர் சோகத்தில் இருந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மாணவி, பிற்பகலில் யாரும் பார்க்காத நேரத்தில் பள்ளியின் மூன்றாவது மாடிக்குச்சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அவர் தற்கொலை முயற்சி செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசியர்கள் உடனடியாக மாணவியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவி ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கூடுவாஞ்சேரி காவல்துறையினர் முதற்கட்ட விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து தீவிர விசாராணை மேற்கொண்டு வருகின்றனர். 10ஆம் பயிலும் வகுப்பு மாணவி பள்ளி மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…