Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

ஐடி பெண் ஊழியர்...9வது மாடியில் இருந்து...குதித்து தற்கொலை! வெளியான அதிர்ச்சி தகவல்!

Priyanka Hochumin October 18, 2022 & 12:20 [IST]
ஐடி பெண் ஊழியர்...9வது மாடியில் இருந்து...குதித்து தற்கொலை! வெளியான அதிர்ச்சி தகவல்!Representative Image.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஐடி பெண் ஊழியர் 9 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை அருகே இருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் ஊராட்சியில் இருக்கும் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 33 வயது ஐடி பெண் ஊழியர் மதுமொழி ஒருவர் 9 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து விசாரணை நடத்திய போது, மதுமொழிக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆனதாகவும், அவருக்கும் அவரின் கணவருக்கும்  ஏற்பட்டதால் அவர் தாழம்பூரில் இருந்து தங்கை வீட்டில் நிம்மதியாக இருக்க சில நாட்க்கள் தங்கியுள்ளார். ஆனால் இன்று வீட்டில் யாருமே இல்லாத நேரத்தில் 9வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை கொண்டார் என்று தெரிய வருகிறது.

இது குடும்ப பிரச்சனையால் நடந்த தற்கொலையா? இல்ல வேறு ஏதேனும் மிரட்டலால் நடந்த சம்பவமா? என்று போலீசார் அனைத்து கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்