Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

செங்கல்பட்டு அருகே பாமக நிர்வாகி வெட்டிக்கொலை - இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்

Saraswathi Updated:
செங்கல்பட்டு அருகே பாமக நிர்வாகி வெட்டிக்கொலை - இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்Representative Image.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் டீ குடித்துக்கொண்டிருந்த பாமக நிர்வாகியை, இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளி (வயது45). இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர சங்க தலைவராக இருந்துவந்தார். இந்நிலையில், இன்று வழக்கம்போல் மறைமலைநகர் நகராட்சி தேசிய நெடுஞ்சாலை அருகே ஓலாலா என்கிற தனியார் டீக்கடையில்  டீ அருந்தியபோது திடீரென 2 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல்,  காளியை சரமாரியாக அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச்சென்றது.  

இதில் படுகாயம் அடைந்த  காளியை மறைமலைநகர் போலீசார் மீட்டு பொத்தேரி உள்ள தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கொலை குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மர்ம கும்பலைத் தேடிவருகின்றனர்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்