கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகரில் உள்ள உக்கடம் ஈஸ்வரன் கோவில் அருகே சிலிண்டரில் இயங்கக் கூடிய கார் ஒன்று ஸ்பீட் ப்ரேக்கரில் ஏறி இறங்கியபோது வெடித்துச் சிதறியது.
காரில் இருந்த சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதுவே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டு துண்டாக உடைந்துவிட்டது.
இன்று அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தில் காரில் இருந்த ஒருவர் பலியானார். இதற்கிடையே தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, சிலிண்டரில் இருந்த கசிவால் தான் விபத்து நேர்ந்ததா இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களிலும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…