கோவை பேருந்து நிலையத்தில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் முரட்டுத்தனமாக தாக்கிக் கொள்ளும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பள்ளி மாணவர்களின் அட்ராசிட்டி வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. வேலூர், திருப்பத்தூர் ,மாவட்டத்தில் அசைன்மெண்ட் கேட்ட ஆசிரியரை மாணவர்கள் தங்களது தனிமை திறமையால் தாக்க முயற்சி செய்தது, செய்முறை தேர்வின் போது பள்ளியின் இரும்பு மேஜைகளை அடித்து பெண்களை கவர்வது போன்ற வீரதீர செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து இந்த சம்பவங்களில் ஈடுபட்ட மாணவர்களை, ஆட்சியர் நேரில் அழைத்து எச்சரிக்கை செய்தும், சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டார். இந்த சம்பவமே இன்னும் ஓயாமல் உள்ள நிலையில், கோயம்புத்தூரில் ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது, பொதுமக்களிடம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர், ஒண்டிப்புதூர் பேருந்து நிலையத்தில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், இரண்டு டீம்களாக பிரிந்து ஒருவரை ஓருவர் தாக்கிக் கொண்டனர்.மேலும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போல், கையில் கிடைத்தவற்றை ஆயுதமாக பயன்படுத்தி கொடூரமாக சண்டையிட்டுக் கொண்டனர். இதனால் அதிர்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அச்சத்துடன் தெறித்து ஓடினர்.
இதனை காரில் சென்ற ஓருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், பள்ளி மாணவர்களின் அட்ராசிட்டி எப்போது முடிவுக்கு வரும் என தலையில் அடித்துக்கொண்டு செல்கின்றனர். ஒருபுறம் அரசுப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களோ, தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனையில் உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…