கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்ற ஓய்வு பெற்ற உதவி ஆணையர் மற்றும் காவலர் வீட்டில் 63 சவரன் நகை திருடட்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குனியமுத்தூர் கோவைப்புதூரை சேர்ந்தவர் கபிலன் பிரேம்குமார் ஓய்வு பெற்ற உதவி ஆணையர். இவர் புத்தாண்டு பிராத்தனைக்காக அருகே வசிக்கும் போக்குவரத்து காவலர் ஜான் சேவியர் என்பவருடன் தேவாலயம் சென்றுள்ளனர்.
பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்த போது, இருவர் வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கபிலன் பிரேம்குமார் வீட்டில் 35 சவரன், மற்றும் ஜான் சேவியர் வீட்டில் 28 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…