ஜி-20 நாடுகள் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதை கொண்டாடும் விதமாக, உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் மின் விளக்குகளால் ஜொலித்தது ப்ரஜக்டர் மூலம் ஜி- 20 லோகோ ஒளிபரப்பப்பட்டது
அர்ஜென்டினா, கனடா, சீனா, இந்தியா, பிரேசில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகள் உள்ளடக்கிய ஜி-20 அமைப்பிற்கு இந்தியா தலைமை பொறுப்பேற்றுள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் ஓராண்டுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட 100 பாரம்பரிய சின்னங்கள் ஜி-20 அடையாள சின்னத்துடன் ஜொலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தஞ்சை பெரிய கோவில் கோட்டை சுவற்றில் ஜி- 20 மாநாடு சின்னத்தை ப்ரொஜெக்டர் மூலம் பிரதிபலிப்பதுடன் . தஞ்சை பெரிய கோவில் சுற்றுச்சுவர் வெள்ளி நிறத்தில் ஜொலிக்க விடப்பட்டுள்ளது. கண்கவரும் இந்த மின் ஒளி அலங்காரம் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு வார காலத்திற்கு ஜொலிக்க உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…