Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

ஜி20 தலைமைப் பொறுப்பில் இந்தியா; ஜொலி ஜொலித்த தஞ்சை பெரிய கோயில்! 

Kanimozhi Updated:
ஜி20 தலைமைப் பொறுப்பில் இந்தியா; ஜொலி ஜொலித்த தஞ்சை பெரிய கோயில்! Representative Image.

ஜி-20 நாடுகள் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதை கொண்டாடும் விதமாக,   உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில்  மின் விளக்குகளால் ஜொலித்தது  ப்ரஜக்டர் மூலம்  ஜி- 20 லோகோ ஒளிபரப்பப்பட்டது

அர்ஜென்டினா, கனடா, சீனா, இந்தியா, பிரேசில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகள் உள்ளடக்கிய ஜி-20 அமைப்பிற்கு  இந்தியா தலைமை பொறுப்பேற்றுள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் ஓராண்டுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. 

 இதனை கொண்டாடும் விதமாக  நாடு முழுவதும் உள்ள தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட 100 பாரம்பரிய சின்னங்கள் ஜி-20 அடையாள சின்னத்துடன் ஜொலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து தஞ்சை பெரிய கோவில் கோட்டை சுவற்றில் ஜி- 20 மாநாடு சின்னத்தை ப்ரொஜெக்டர் மூலம் பிரதிபலிப்பதுடன் .  தஞ்சை பெரிய கோவில் சுற்றுச்சுவர் வெள்ளி  நிறத்தில் ஜொலிக்க விடப்பட்டுள்ளது. கண்கவரும் இந்த மின் ஒளி அலங்காரம்  மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு வார காலத்திற்கு ஜொலிக்க உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்