மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது கடும் குளிர் தொடங்கியுள்ளது. வழக்கமாக நவம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி இறுதிவரை கடும் குளிர் மற்றும் உரை பணி நிலவி வரும்.. இதேபோன்று கடந்த சில தினங்களாக மழை தொடர்ந்து பெய்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக பகல் நேரங்களில் அதிக வெப்பமும் இரவு நேரங்களில் அதிகமான குளிரும் உணரப்படுகிறது.
கடும் குளிர் காரணமாக கொடைக்கானலில் கடந்த இரண்டு தினங்களாக 8 டிகிரி செல்சியஸருக்கு கீழ் வெப்பநிலை சென்று உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது... அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வருவதால் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் தாமதமாக ஆரம்பிக்கின்ற நிலையும் மாலை மற்றும் காலை நேரங்களில் தெருக்களில் தீ மூட்டியும் குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர்.
மேலும் கடுங்குளிர் தொடர்வதால் கொடைக்கானலில் பிரதானமாக உள்ள கடைகளில் கம்பளி ஆடைகளை சுற்றுலா பயணிகள் வாங்கி செல்வதால் ..கம்பளி ஆடைகள் வியாபாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது... தொடர்ந்து வெப்பநிலை குறைந்து வந்தால் உரை பணி ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…