கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்பதற்காக மின்னொழியில் ஜொலிக்கும் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் தயாராகி வருகிறது.
கொரோனா பெருந்துற்று காரணமாக கடந்த பல விதிமுறைகளால் விழாக்கள் மற்றும் பண்டிகைகள் கொண்டாட முடியாத நிலையால் பல்வேறு தொழில் மற்றும் வர்த்தகங்கள் முடங்கின. இதில் குறிப்பாக சுற்றுலாத் தளங்களும் அதனை நம்பி தொழில் செய்து வந்த மக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகினர்.
தற்போது விதிமுறைகள் பலவும் தளர்த்தப்பட்டு வரும் நிலையில் சுற்றுலா மீண்டும் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு வழக்கமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு போன்ற தொடர் விடுமுறைகளில் சுற்றுலாப் பயணிகள் கூறிவது வழக்கம். இதன் காரணமாக இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று எண்ணப்படுகிறது.
இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள தேவாலயங்கள், தனியார் விடுதிகள் போன்ற இடங்களில் வண்ண விளக்குகள் தயார் செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானலில் பெரும்பாலும் உள்ள தேவாலயங்கள் விடுதிகளில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு மலைகளின் இளவரசியை ஜொலி, ஜொலிக்க வைத்துள்ளனர்.
மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்பதற்காக கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதியில் பஞ்சை வைத்து கிறிஸ்துமஸ் தாத்தா போன்ற தத்ரூப உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.. மேலும் தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகளும் தொடங்கியுள்ளதால் விழாக்களை கொண்டாடுவதற்கு கொடைக்கானல் மக்களும் வரவிருக்கும் சுற்றுலா பயணிகளும் தயாராகி வருகிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…