கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகத்திற்கு நுழைந்த மர்ம நபர், தனது உடலில் 'ஓம் சிவா' என பச்சைகுத்தி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குள் கடந்த திங்கட்கிழமை இளைஞர் ஒருவர் புகுந்து உட்புறமாக பூட்ட முயன்றார். அவரை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் உதவியாளர் விஜயன் என்பவர் அடித்து விரட்டினார்.
அதனை தொடர்ந்து சில நிமிடங்களிலேயே அண்ணா சிலை ஜி.டி.மியுசியம் அருகே அரசு பேருந்து பின்சக்கரத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் வானதி சீனிவாசன் சட்டமன்ற அலுவலகத்திற்குள் நுழைந்தது, தற்கொலை செய்து கொள்வது போன்ற சிசிடிவி காட்சிகள் அனைத்தும் காவல்துறையினரால் கைப்பற்றபட்டது.
இதனிடையே அலுவலகத்துக்குள் நுழைந்த நபர் யார் என்பது குறித்தும், என்ன நோக்கத்திற்காக நுழைந்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் இறந்த நபரை ஆய்வுக்கு உட்படுத்தியதில், அவர் தனது நெஞ்சில் 'ஓம் சிவா' என பச்சை குத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. அலுவலகத்துக்குள் நுழைந்த நபர் மலையாளத்தில் பேசினார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த நபர் யார் என்பது குறித்து பந்தயசாலை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…