Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோவையில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.70லட்சம் கொள்ளை..!

Baskaran Updated:
கோவையில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.70லட்சம் கொள்ளை..!Representative Image.

கோவையில் தனியார் உணவக வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடியை உடைத்து ரூ.70 லட்சம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை எஸ்.எஸ்.குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (51), ரியல் எஸ்டேட் அதிபர். இவர் நேற்று இரவு தொழில் ரீதியாக  கண்ணன் என்பவருக்கு பணம் கொடுக்க ரூ.70 லட்சம் பணத்துடன் தனது காரில் அவினாசி சாலை சித்ரா அருகே அன்னப்பூர்னா உணவகத்திற்கு வந்துள்ளார்.

பின்னர் காரை வெளியே நிறுத்தி விட்டு கண்ணனுக்காக காத்திருந்த நேரத்தில் உணவு சாப்பிட உணவகத்திற்குள் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது அவரது காரின்  பின் கண்ணாடி உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக உள்ளே பார்தத போது, காரில் வைத்திருந்த ரூ.70 லட்சம் பணம் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து அவர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கார் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்