டேய் பொடியா ஹெல்மெட் போட்டு போடா என சாலை விதிகளை மீறி செல்லும் இளைஞர்களுக்கு தன்னுடைய குறும்புத்தனமான பேச்சின் மூலம் கோவை டிராபிக் போலீஸ் ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை லக்ஷ்மி மில் சிக்னலில் ட்ராபிக்கை நிர்வகித்துக் கொண்டிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர், வாகனத்தில் இருக்கும் ஒருவரை நல்லா சிரிக்கிற ராஜா என்றும், இரு சக்கர வாகனத்தில் தலை கவசம் அணியாமல் மூன்று பேர் பயணித்ததை கண்டவுடன், டே பொடியா ஹெல்மெட் போடுடா என்றும் கூறுகிறார்.
மேலும், மூன்று பேர் வண்டியில் செல்வதை பார்த்த அவர், அப்பா அம்மாக்கு தெரியாம வண்டிய தூக்கிட்டு வந்துடுறீங்க என்றும் சொல்கிறார். சாலைவிதிகளை மீறுவதை நக்கலாக குத்திக் காட்டி மைக்கில் அவர் பேசும் பேச்சு, வாகன ஓட்டிகளை திரும்பிப் பார்க்க வைக்கிறது.
இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட, அது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…